districts

img

போக்குவரத்து நிரம்பிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற மாதர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 6- திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்தில் நெருக்கடி மிகுந்த பகுதிகள் மற்றும் பள்ளி கல்லூரி இருக்கக்கூடிய பகு திகளில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்  என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர் மாவட்ட 16 ஆவது மாநாட்டு தீர்மானப்படி திருப்பூர் மாவட்டம்  முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள  டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரியும், பள்ளி, கல்லூரி பெண்கள் பணிபுரியும் இடங்களில் முறையாக பாலியல் புகார்  கமிட்டி அமைக்க கோரியும், ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக்  ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளை சந்தித்து மனு கொடுத்து பேசப்பட்டது. இந்நிகழ் வில் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, மாவட்டச் செயலா ளர் கே.சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் ஆர்.கவிதா, மாவட்ட  துணை தலைவர்கள் ஆர்.மைதிலி, எஸ்.பானுமதி, மாவட்ட  துணை செயலாளர் சி.பானுமதி ஆகியோர் கலந்து கொண்ட னர்.