districts

img

சட்டவிரோதமாக கருமுட்டை பெற்ற மருத்துவமனைகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜுலை 10- சட்ட விரோதமாக ஈரோடு சிறுமி யிடம் கருமுட்டை பெற்ற தனியார் மருத்துவமனைகளின் அங்கீகா ரத்தை ரத்து செய்ய வேண்டும் என  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு நகர 7 ஆவது  மாநாடு ராதாமணி நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சந்திரா தலைமை வகித்தார். சங்கத்தின்  கொடியை அம்மணியம்மாள் ஏற்றி  வைத்தார். மாநாட்டை துவக்கி  வைத்து மாவட்ட தலைவர் பிர சன்னா உரையாற்றினார். கட்டுமான தொழிலாளர் சங்க நகர தலைவர் சி.கே.முருகேசன் வாழ்த்துரையாற் றினார். இதில், ரேசன் கடையில் அத்தியா வசிய பொருட்களை ஒரே நாளில் வழங்க வேண்டும். நுண் நிதி நிறு வனங்களில் அடாவடித்தனமான வட்டி வசூலை தடுத்து நிறுத்த வேண் டும். அன்றாடம் உயரும் சமையல் எரி வாயு சிலிண்டரின் விலையினை கட் டுப்படுத்த வேண்டும். ஈரோடு சிறுமி யிடம் கருமுட்டை பெற்ற அனைத்து  மருத்துவமனைகளின் அங்கீகா ரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஈரோடு நகரக்குழு தலைவராக பாவாயி, செயலாளராக கொங்கு நதி, பொருளாளராக புஷ்பா உட்பட 13 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய் யப்பட்டது. முடிவில், மாவட்ட செய லாளர் பா.லலிதா நிறைவுரையாற் றினார்.