சேலம், மார்ச் 18- இடங்கணசாலை பகுதியில் மக்களுக்கு தீமை ஏற்படுத்தம் வகை யில் அமையக்கூடிய கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதர் சங்கத்தினர் பெருந்திரள் போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், இலங்கணசாலை நகராட்சிக்குட் பட்ட சின்னேரியை சுற்றி சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இடங்கணசாலை நக ராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. ஏரியை சுற்றி உள்ள கஞ்சமலையூர், கே.கே.நகர், சாத்தம்பாளையம், இ. காட்டூர், தூதனூர், இடங்கணசாலை, மெய்யனூர், ராசிகவுண்டனூர் ஆகிய ஊர்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் சாக் கடை கால்வாய்கள் இல்லை. ஆனால், பல கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்தி கரிப்பு ஆலை அமைக்க முடிவு செய் துள்ளனர். தொடர்ந்து திட்டங்களை ஒரே இடத்தில் செயல்படுத்துவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் முழுமை யாக மாசடைந்துள்ளது. இத்திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக் கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களுக்கு தீமை ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ள இத்திட்டதிற்கு எதிர்ப்பு தெரி வித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில் பெருந்திரள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.வைரமணி தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட துணைத்தலைவர் ஜே. ராஜாத்தி, மாவட்டப் பொருளாளர் கே.பெருமாள், சங்ககிரி ஒன்றியச் செயலாளர் மோகனா, பானுமதி, செல்வி உட்பட் திரளானோர் கலந்து கொண்டனர்.