districts

img

ரேசன் கடை கேட்டு மாதர் சங்கம் மனு

ஈரோடு, ஜூலை 4- அந்தியூர் அருகே நியாய விலைக்கடை அமைக்க தரக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் மற் றும் விதொச, கட்டிட சங்கத்தினர் மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், கெட்டிசமுத்திரம் கிராமத்திற்குட்பட்டது கிருஷ்ணாபுரம். இங்குள்ள எரங் காடு பகுதியில் சுமார் 350 குடும்பத்தினர் ரேசன் அட்டை கள் வைத்துள்ளனர். இவர்கள் ரேசன் பொருட்கள் பெறுவ தற்கு புதுப்பாளையம் செல்ல வேண்டும். நீண்ட தூரத்தில் ரேசன் கடை இருப்பதால், பொருட்கள் விநியோகிக்கப்படு வது குறித்து தகவல் தெரிவதில்லை. இதனால் கிருஷ்ணா புரம் மக்கள் வேலையை விட்டு சென்றாலும் அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே,  அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா புரத்தில் தனியாக ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தனர்.