திருப்பூர், மே 23 - திருப்பூர் அம்பேத்கர் காலனி பகுதியில் வக்கிரமாக இழிவுபடுத்தியதால் பெண் ஒரு வர் தற்கொலை செய்து கொண்டார். அவ ருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளிய எட்டு பேரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள் ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா தேவி, மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி ஆகி யோர் திங்களன்று கொங்கு நகர் காவல் உதவி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் கொங்கு நகர் அம் பேத்கர் காலனியில் குடியிருக்கும் மாறன், ரங் காத்தாள் ஆகியோரின் மகள் தமிழரசி. இவர் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு சுமார் 9 மணி அளவில் பண்டு வசூல் செய்ய வந்த வசந்த குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தி ருக்கிறார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் எட்டு நபர்கள் அந்த பெண்ணை சந்தே கப்பட்டு அடித்து உதைத்து துன்புறுத்தி உள் ளனர். அவரை மானபங்கப்படுத்தியதுடன், 500 ரூபாய் தருகிறோம் எங்களிடமும் வா என்று மோகன் ராஜ், கருப்புசாமி எனும் இரண்டு பேர் பாலியல் ரீதியாகவும் துன்பு றுத்தி உள்ளனர். இதனால் தமிழரசி மனம் உடைந்து ரயி லில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். ஆகவே தமிழரசியின் மரணத்திற்கு காரண மான எட்டு நபர்களை காவல் துறையினர் உடனே கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.