தருமபுரி, செப்.18- ஆசிரியர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு, மாணாக்கர்களின் திறன் களையும் வளர்க்க வேண்டும் என புது தில்லி விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்க டேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 21 ஆம் நூற்றாண்டில் கற்பித்தல் அணுகுமுறைகள் குறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்களிடையே புது தில்லி விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்க டேஸ்வரன் கலந்துரையாடினார். அப் போது அவர் பேசுகையில், அறிவியல் முன்னேற்றங்களால் பல்வேறு மாற்றங் கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந் தாற்போல் ஆசிரியர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு, மாணவ மாணவி யரின் திறன்களையும் வளர்க்க வேண் டும். அனுபவம், தரவு சேகரிப்பு, தக வல் அளித்தல், ஆராய்தல், விமர்சன ரீதி யாக மதிப்பீடு, முன்னறிவிப்பு, விவாதங் கள், கவனித்தல், குழுக்களாக இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட முறைகளை பின்பற்றி திறன்களை வளர்த்துக் கொள்வது 21 ஆம் நூற்றாண்டின் இன்றி யமையாததாகும். இதேவழியில் மாண வர்களுக்கும் திறன்களை வளர்ப்பது ஆசிரியர்களின் தலையாய கடமை யாகும், என்றார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முனைவர் மான்விழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயபிரகாசம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தகடூர் புத்தகப் பேரவை, தமிழ்நாடு அறிவியல் இயக் கம், வானவில் மன்றம் உள்ளிட்ட அமைப் புகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.