கோவை, நவ. 26- மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து மாஸ் கிளினிங் தூய்மை பணி களை மேற்கொண்ட மாநகர காவல்துறை யினரின் செயல் மக்களிடையே வர வேற்பை பெற்றுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஆர்.எஸ்.புரம் மற்றும் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் கோவை மாநகர காவல்துறையினர், மாநக ராட்சி பணியாளர்களுடன் இணைந்து உக் கடம் புல்லுகாடு ஹவுசிங் யுனிட் பகுதியில் மாஸ் கிளினிங் தூய்மை பணிகளை மேற் கொண்டனர். மாநகர காவல்துறை மாநகராட்சி பணியாளர் என சுமார் 100க்கும் மேற் பட்டோர் இணைந்து உக் கடம் புல்லுக்காடு ஹவு சிங் யுனிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழு வதையும் தூய்மை செய் தனர். அப்பகுதியில் கிடந்த குப்பைகள் தேவையின்றி வளர்ந்திருந்த களை செடி களை அப்புறப்படுத்தினர். இதில், 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு அப் பகுதியையே மாஸ் கிளினிங் செய்தனர். தூய்மை பணி என்பது அனைவருக்கும் பொதுவானது எனவும், பொதுமக்களும் அவர்களது பங்களிப்பை வழங்கலாம். நம் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ் வாறான முயற்சியை மாநகராட்சி பணியா ளர்களுடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொள்வதாக காவலர்கள் தெரிவித் தனர். காவல்துறையினரின் தூய்மைப்பணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.