தருமபுரி, நவ.7- மனித உயிர்களை காவு வாங்கும் பாலக் கோடு - ஒசூர் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணத்தில் ஈடுபட்டனர். தருமபுரியில் இருந்து பாலக்கோடு வழி யாக ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு - ஓசூர் மாநில நெடுஞ்சாலையில், மல்லுப்பட்டி வரை போக்குவரத்திற்கு தகுதியில்லாத, விபத்தை ஏற்படுத்தும் வகையில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தரமற்ற இச் சாலையினால், குறிப்பாக மழைக்காலங்களி லும் கடுமையான வெப்பக்காலங்களிலும் வழுவழுப்பு தன்மையுடன் மாறி பிடிமானம் இல்லாமல் தினந்தோறும் விபத்துகள் ஏற் படும் சூழல் உள்ளது. இவ்விபத்துகளால் பல ருக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டுள் ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட மிகப்பெரிய விபத்துகள் ஏற்பட்டுள் ளன. எனவே, போர்க்கால அடிப்படையில் பாலக்கோடு முதல் மல்லுப்பட்டி சாலை வரை தரமான கட்டுமானப் பொருட்களுடன் கூடிய புதிய சாலையை அமைக்க வேண்டும். இவ் விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த கூடுதல் நிவாரணம் வழங்க வேண் டும். மல்லுப்பட்டியிலிருந்து வேலாயுதம் நகர் வரை தார்ச்சாலை, வெள்ளிச்சந்தையில் பய ணியர் நிழற்கூடம் மற்றும் இலவச ஆண்கள், பெண்கள் கழிப்பிடம் அமைத்துத்தர வேண் டும். குண்டாங்காடு கிராமத்தை மையப் படுத்தி மலைக்கிராமங்களை ஒருங்கி ணைத்து தனி ஊராட்சி உருவாக்க வேண்டும். பாலக்கோடு வட்டத்தில் உள்ள பிக்கன அள்ளி, ஐக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய ஊராட்சிகளை பாலக்கோடு ஒன்றியத் துடன் இணைக்க வேண்டும். நீண்ட காலமாக அனுபவத்திலுள்ள பயனாளிகளுக்கு நிலப் பட்டா, வீட்டுமனைப்பட்டா வழங்க வேண் டும். வனத்தையொட்டியுள்ள மலைக்கிரா மங்களில் வனத்துறையால் வசூலிக்கப்படும் கட்டாய வரி வசூலை தடுத்து நிறுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று நடைபயண இயக்கத்தில் ஈடு பட்டனர். மல்லுப்பட்டியிலிருந்து துவங்கிய நடை பயண பிரச்சாரத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.நாகராசன் தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் ஜி.நக்கீரன், பி. ஆறுமுகம் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர்கள் பி.டில்லிபாபு, ஆர்.சிசுபாலன், மாவட் டச் செயலாளர் ஏ.குமார், வட்ட செயலாளர் கார்ல் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் டி.எஸ்.ராமச்சந்திரன், பி.ஜெயராமன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சேகர், பி. கோவிந்தசாமி, சி.கலாவதி, பி.முருகன், ஜி. பாண்டியம்மாள், என்.வரதராஜன், சி.ராஜா, கே.எம்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பாலக்கோடு வட்டாட் சியரிடம் மனு அளிக்கப்பட்டது.