districts

img

தருமபுரி, சேலம் தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு வாக்குசேகரித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம்

சேலம், ஏப்.14- தருமபுரி, சேலம் தொகுதி திமுக  வேட்பாளர்களை ஆதரித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர  வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர். தருமபுரி மக்களவைத் தொகுதியில்  இந்தியா கூட்டணி சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆத ரித்து, மேச்சேரி ஒன்றியம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்கு சேரிப் பில் ஈடுபட்டனர். சுட்டெரிக்கும் வெயி லையும் பொருட்படுத்தாமல் குடும்பம்  குடும்பமாக திரண்டு வந்து பொதுமக் கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொ டர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளர் சீனிவாச பெருமாள், பேரூர் செயலாளர் சர வணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.மணிமுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி மகளிரணி தலைவர் முத்துலட் சுமி, சிபிஎம் பேரூராட்சி கவுன்சிலர் ஆர். பழனி, கிளைச் செயலாளர்கள் உட்பட  திரளானோர் கலந்து கொண்டனர். கொளத்தூர் ஒன்றியம், செரியார்பா ளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.எம்.தேவி, வி.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சேலம் கிழக்கு மாந கரக்குழு சார்பில், இந்தியா கூட்டணி யின் சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. சேலம் மூலப்பிள்ளையார் கோவில், சுபாஷ் நகர், வெடிப்பு கல்பாறை உள் ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநகரச் செய லாளர் கனகராஜ், ஆர்.வைரமணி மற் றும் மாநகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.