districts

img

இஸ்ரேல் படுகொலை யுத்தத்துக்கு எதிராக கண்டன முழக்கம்

பள்ளபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

ஊத்துக்குளியில் ‘இந்தியா’ கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 25 - பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்துள்ள இஸ்ரேலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியினர் உடுமலை  ஒன்றியம் பள்ளபாளையத்தில் புதன்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு அனுமதி மறுத்து காவல் துறையி னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது  செய்தனர். உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பள்ளபாளையம் கிளைச் செயலாளலர் பி.எஸ்.சுந்தரம் முன் னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியு றுத்தி உடுமலை ஒன்றியச் செயலாளர் கி. கனகராஜ், கமிட்டி உறுப்பினர் குமரகுரு, புரட் சிநாதன் ஆகியோர் பேசினர். பாலஸ்தீனத்தை பாதுகாப்போம், இஸ் ரேல் கொலைகாரர்களே பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு குழந்தைகள் மீதும் மருத் துவமனைகள் மீதும் குண்டுவீசிக் கொல் லும் இஸ்ரேலே, படுகொலைப் போரை ஆக்ர மிப்புப் போரை உடனடியாக நிறுத்து, நிவார ணப் பணிகளை துரிதப்படுத்து, ஐக்கிய நாடு கள் சபையே வேடிக்கை பார்க்காதே, ஏகா திபத்திய லாபவெறிக் கொள்ளையர்களால் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடு, பாசிச இஸ்ரே லுக்கு ஆதரவளிக்கும் மோடி அரசே சுதந்திர  பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்தியா வின் நிலைப்பாட்டை உறுதி செய் என முழக் கமிடப்பட்டது.  இதில் எம்.தட்சினாமூர்த்தி, சிவசுப்ரம ணியன் மாசானி, கருப்புசாமி இமான், தண்ட பாணி, திருமலைசாமி மற்றும் 30 பெண் கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பேசிக்  கொண்டிருந்தபோது தளி காவல் ஆய்வாளர் குறுக்கிட்டு, இந்த போராட்டத்திற்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஒலி  பெருக்கி, மார்க்சிஸ்ட் கட்சியினர் அனைவ ரையும் கைது செய்தார்.

இஸ்ரேலின் ஆக்கிர மிப்பு போரை எதிர்த்தும், ஜனநாயக முறையி லான போராட்டத்துக்கு அனுமதி மறுத்த  காவல் துறையைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட்  கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். கைது செய்தவர்களை ஜல்லிபட்டி மண்டபத்தில் காவல் துறையினர் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஊத்துக்குளியில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்: அதேபோல் ஊத்துக்குளி டவுனில் புதன் கிழமை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு  எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் திமுக நகர கழகச் செயலாளர்  கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்  ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் தாலுக்கா செயலாளர் வி.எம்.சர வணன், மதிமுக ஒன்றியச் செயலாளர் வி.சுந் தரராஜு, காங்கிரஸ் நகரத் தலைவர் வேலன்  என்கிற ரங்கசாமி, முஸ்லிம் லீக் கிளைத் தலை வர் பாபு ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் நோக் கத்தையும், இப்போரினால் குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் படுகொலை செய் யப்பட்டு வருவதையும், சுதந்திர பாலஸ்தீ னம் என்ற நிலைபாட்டை வலியுறுத்தியும் இவர்கள் உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட் டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு  போர் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.