நாமக்கல், பிப்.23- எலச்சிபாளையம் அருகே கொண்னை யார் கிராமம் ஆயித்தாகுட்டையில் இரண்டு வருட காலமாக கிடப்பில் போடப்பட்ட ஆழ் துளை கிணற்றை சரிசெய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கொன்னையார் கிராமம், ஆயித்தாகுட்டை - கரியாம்பாளையம் செல் லும் சாலையோரத்தில் ஆள்துளை கிணறு கடந்த 43 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட் டது. குடிநீர் வறட்சி ஏற்படும் காலத்தில்கூட தடையின்றி குடிநீர் கிடைக்கும் ஆழ்துளைக் கிணறாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2 வருட காலமாக பழுதடைந்த நிலையில் ஆழ் துளை கிணறு உள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால், கரியாம்பாளையம், வட்டூர், பள்ளி பாளையம், எலச்சிபாளையம், ஆலங்காடு, வண்டிநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பழு தடைந்த ஆழ்துளை கிணற்றை சரிசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் பி.மாரி முத்து தலைமை வகித்தார். இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாச லம், ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் மற்றும் ஆர்.ரமேஷ், பி.கிட்டுசாமி, ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.