நாமக்கல்.டிச.29- திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியத்தில் வருவாய் ஆய்வாளரை நிரந்தரமாக நியமிக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதன போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறை யினர் மூலம் கைது செய்யப்பட்டதால் இரண்டு மாத காலமாக திருச்செங்கோடு வருவாய் ஆய்வாளர் பொறுப்பு என்ற அடிப் படையில் செயல்பட்டு வருகிறார். எலச்சி பாளையம் வருவாய் வட்டத்திற்குட்பட்டு 14 கிராமங்கள் உள்ளன. இதில், வசிக்கக் கூடிய பொதுமக்கள் இறப்பு சான்று, வாரிசு சான்று, சாதிச்சான்று என பல்வேறு சான்றி தழ்கள் பெறுவதில் பெரும் சிரமத்தை சந் தித்து வருகின்றனர். இதனால், மாதக்கணக் கில் சான்றிதழ் பெறாமல் பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் நிரந்தரமாக வரு வாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றியக்குழு கூட்டம் பி. கிட்டுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாச லம், ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருவாய் ஆய்வாளரை நிரந்தரமாக நிய மிக்க வலியுறுத்தி எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு வரும் ஜன.3 ஆம் தேதியன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.