திருப்பூர், நவ. 8 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டா ரத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழி லாளர்களுக்கு கடந்த 15 வாரங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பதை உட னடியாக வழங்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந் திரள் முறையீட்டுப் போராட்டம் நடத்தப் பட்டது. தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை ரூ.2700 கோடியை நிலுவையில் வைத்திருக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், பல்லடம் வட்டாரத்தில் 15 வாரங்களாக சம்பள பாக்கி வைத்திருப்பதை தீபா வளி பண்டிகை நெருங்கி வரும் நேரத் தில் உடனடியாக வழங்க வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் புதனன்று போராட்டம் நடத்தப்பட் டது. அனைவருக்கும் சம்பள பாக்கியை உடனே வழங்குவதுடன், 100 நாட்களும் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட் டார வளர்ச்சி அலுவலர் மனோகரனி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் அ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் முருகசாமி, வாலிபர் சங்க செயலா ளர் முருகேஷ், விசைத்தறி சங்க நிர்வாகி ஆனந்தராஜ் மற்றும் ஏராளமானோர் பங் கேற்றனர்.