நாமக்கல், செப்.11- மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோடு, ஆனங்கூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஆனங்கூர் கிராமம், அண்ணா நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல வருடங்களாக மயான வசதி இல்லாமல், இப் பகுதியில் இறந்தவர்களை ஓடை அருகே புதைத்து வரும் அவல நிலை உள்ளது. மழைக் காலங்களில் சடலங்களை புதைக்கவும், எரிக் கவும், முடியாமல் இப்பகுதி மக்கள் பல் வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த அவலம் குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவ லர் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், ஆனங்கூர் ரயில்வே கேட் அருகில் இருப்ப தால், கேட் திறந்ததும், இருசக்கர வாகனம் மற்றும் வாகனப் போக்குவரத்து வேகமாக வும், அதிகமாகவும் வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த வாரத் தில் நடந்த 2 விபத்தில் ஒருவர் உயிரிழந்துள் ளார். அதை தடுக்கும் வகையில் சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆனங்கூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.சூர்ய பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர். மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.வேலா யுதம், நகரச் செயலாளர் ஐ.ராயப்பன், ஒன்றி யக்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உட் பட அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற் பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடி வில், குருசாமி நன்றி கூறினார். இதைத்தொ டர்ந்து கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை கள் அடங்கிய மனுவை கிராம நிர்வாக அலுவ லர் (பொ) மற்றும் ஊராட்சி தலைவர் ஆகி யோரிடம் அளித்தனர்.