districts

img

மோடியின் ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கி எஸ்பிஐ வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 5- மோடி அரசின் தேர்தல் பத்திர ஊழலுக்கு துணை போகும் எஸ். பி.ஐ வங்கியை கண்டித்து கோவை யில் எஸ்பிஐ வங்கி முன்பு மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பத்திர முறை செல் லாது என உச்சநீதிமன்றம் ஒரு மித்த கருத்தாக கடந்த மாதம் அதி ரடி தீர்ப்பை வழங்கியது. மார்க் சிஸ்ட் கட்சி தொடுத்த இந்த வழக் கில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப் பில், பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் விநியோகத்தை உட னடியாக நிறுத்த வேண்டும். இது வரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய  தேர்தல் ஆணையத்திற்கு தெரி விக்க வேண்டும். எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் வாங்கியது தொடர்பான அனைத்து விபரங்க ளையும் மார்ச் 6 ஆம்தேதிக்குள் ஒப் படைக்க வேண்டும். இந்திய தேர் தல் ஆணையம் மார்ச் 13ஆம் தேதிக் குள் இதுதொடர்பான விவரங் களை இணையதளத்தில் பதிவேற் றம் செய்ய வேண்டும் என அதிரடி  உத்தரவு பிறப்பித்தது.  இந்நிலையில், இந்தியத் தேர் தல் ஆணையத்திடம் தேர்தல் பத் திரங்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை  அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித் துள்ளது.  மேலும், மோடி அரசின் தேர்தல்  பத்திர ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண் டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறது. இதன்தொடர்ச்சியாக, கோவை ரயில் நிலையம் அருகில்  உள்ள எஸ்.பி.ஐ தலைமை வங்கி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், மாநிலக்குழு உறுப்பினர் எ. ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் யுகே.சிவஞானம், கே. அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், என்.ஆறுச்சாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மோடி அரசின் தேர்தல் பத்திர ஊழலுக்கு துணை போகும் எஸ்.பி.ஐ வங்கியை கண் டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திர நிதி வாங்கி யோர் விவரத்தை உடனே வெளி யிடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.