districts

img

ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

திருப்பூர், நவ.18 - ஒரே நாடு ஒரே தேர்தல், கடுமையான விலைவாசி உயர்வு  உள்ளிட்ட ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக  விரோத, மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி  காங்கேயம் தாலுகாவில் 14 இடங்களிலும், திருப்பூர் வடக்கு  ஒன்றியப் பகுதிகளில் 20 இடங்களிலும் பிரச்சார இயக் கம் நடைபெற்றது.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கும்,  ஜனநாயகத்துக்கும் எதிரானது என்பதால் அந்த முடிவை  கைவிட வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், 100 நாள் வேலை திட் டத்தை 200 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும், தேங்காய்  எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து நியாயவிலைக்  கடைகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும், தெரு  நாய்களால் கொல்லப்படும் ஆடு மாடு உள்ளிட்ட வளர்ப்பு  கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு  வழங்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து  பகுதிக்கும் முறையாக விநியோகம் செய்ய வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சி யின் காங்கேயம் தாலுகா குழு சார்பில் கடந்த வெள்ளிக்கி ழமை இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.  சிவன்மலையில், கட்சியின் தாலுகா செயலாளர் எம். கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சார இயக் கத்தை, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணி கண்டன் துவக்கி வைத்தார்.  இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் தேவராஜன், செல்வ ராஜ், வின்சன்ட், கருப்பசாமி, சுப்பிரமணி, தங்கவேல்,  மாவட்டக் குழு உறுப்பினர் திருவேங்கடசாமி மற்றும் கிளைச்  செயலாளர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற் றனர். 14 இடங்களில் அரசியல் விளக்கப் பிரச்சாரம் நடை பெற்றது. திருவள்ளுவர் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்  இந்த பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து வைத்து சிறப் புரை ஆற்றினார். வடக்கு ஒன்றியம்: அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமையில் ஞாயி றன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பெருமாநல் லூர் பகுதியில் துவக்கிய இப்பிரச்சார இயக்கத்தை மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண்ணன் துவக்கி வைத்து பேசி னார். இப்பிரச்சார இயக்கம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம் பாளையம், புதிய திருப்பூர், தொரவலூர், சொக்கனூர்,  வள்ளிபுரம், குருவாயூரப்பன் நகர், பரமசிவம்பாளை யம், வாரணாசிபாளையம், காளம்பாளையம், மேற்குபகுதி,  காளிப்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம்  உள்ளிட்ட 20 பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இதில், மாவட்டக் குழு உறுப்பினர் எ.சிகாமணி, ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பசாமி, இளங்கோ, மகாலிங் கம், அலகு, சந்தோஷ் உட்பட கிளைச் செயலாளர்கள் பலர்  பங்கேற்றனர்.