districts

img

55 ஆவது வார்டில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மேயர், ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

திருப்பூர், நவ. 24 - திருப்பூர் மாநகராட்சி 55ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடி நீர், சாலை, சாக்கடை, தெரு விளக்கு  உள்ளிட்ட தேங்கிக் கிடக்கும் பிரச்ச னைகளுக்கு தீர்வு காணுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநக ராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 55ஆவது வார்டுக்கு உட்பட்ட கோபால் நகர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கிளைச் செயலாளர் பி.ராமு மற்றும்  அக்கட்சிக் கிளை உறுப்பினர்கள், கட் சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபாலுடன், மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் மற்றும் ஆணையர் கிராந்தி குமார் பாடி ஆகியோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித் தனர். அதில், மேற்கண்ட பகுதிகளில் வீடுகளுக்கு 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வரும் நிலை உள் ளது. இதை வாரம் ஒரு முறை குடிநீர் வர உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இரு முறைக்கு ஒரு முறை மேட் டுப்பாளையம் குடிநீர் வழங்க வேண் டும். திருவிக நகர் 8 வீதிகள், கோபால்  நகர் 8 வீதிகள், பாரதியார் நகர் 2 வீதி கள் என அனைத்துப் பகுதியிலும் மாதக்கணக்கில் சாக்கடைகள் சுத் தம் செய்யப்படாமல் மிக மோசமாக உள்ளது.

பல இடங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகும் மையமாக உள்ளது. இது மிக மோச மான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி  உள்ளது. எனவே அனைத்து சாக்க டைகளையும் தூர்வார வேண்டும். கோபால் நகர் பகுதியில் சில வீதி களில் நான்காவது குடிநீர் திட்ட பிர தான குழாய்கள் பதிக்கப்படாம லும், வீட்டுக் குழாய் இணைக்கப்படா மலும் உள்ளது. இப்பணிகளை முடித்து அந்த வீதிகளுக்கும் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.  பாதாளச் சாக்கடை தோண்டவும்,  நான்காவது குடிநீர் திட்ட மெயின்  குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட  குழிகளால் சாலைகள் மிகவும் பழு தாகி குண்டும், குழியுமாக நடக்கக் கூட முடியாத நிலை உள்ளது. எனவே  அனைத்துப் பகுதியிலும் சாலை  வசதி ஏற்படுத்தித் தர வேண் டும். சுற்றிலும் நான்கு பகுதி களில் கொட்டப்படும் குப்பை களை உடனடியாக சுத்தம்  செய்ய வேண்டும். கொசு  மருந்து அடிக்க வேண்டும்.  வெள்ளியங்காடு 60 அடி  சாலை, தாராபுரம் சாலை  முகப்பு நுழைவாயில் தொடங்கி முத்தையன் கோவில் வரை தெரு விளக்குகள் ஒன் றிரண்டு தவிர பொதுவாக எரிவ தில்லை. இதனால் இரவில் பயணிக ளுக்கு சிரமம் ஏற்படுகிறது. காலை  நடைபயிற்சி செல்வோர் பாதிக்கப் படுகின்றனர். எனவே தெரு விளக்கு களை உடனடியாக சரி செய்ய வேண் டும். வெள்ளியங்காடு தென் பகுதியி லும் தார் சாலை போட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.