திருப்பூர், மார்ச் 21- திருப்பூர் மாநகராட்சி பட்டுக் கோட்டையார் நகர் மேற்குப் பகுதி யில் ஓடைப் புறம்போக்கு என்ப தால் வீடுகளைக் காலி செய்யு மாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். திருப்பூர் மாநகராட்சி பட்டுக் கோட்டையார் நகரின் மேற்கு பகுதியில் வசித்து வரும் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஓடைப் புறம்போக்கு என்று வகையினம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, இங்கிருக்கும் மக்கள் ஒரு வார காலத்தில் காலி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 45 ஆண் டுகளாக இம்மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் கூலித் தொழிலாளர்களாக வும், பனியன் தொழிலாளர்களாக வும் வேலை செய்து வரக்கூடியவர் கள் ஆவர். மாநகராட்சி குடிநீர் இணைப்பு, சொத்து வரி மற்றும் மின் இணைப்பு ஆகியவை பெற்று வசித்து வருகின்றனர். இந் நிலையில் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் நீர்நிலைப் புறம் போக்கில் குடியிருப்போரை காலி செய்வதற்கு இது போல் பல்வேறு பகுதிகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநக ராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ள னர்.
இந்நிலையில், திங்களன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் ஆகி யோர் பட்டுக்கோட்டையார் நகர் மேற்குப் பகுதிக்குச் சென்று இங்கு வசித்து வரும் மக்களை நேரில் சந் தித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் கே.பொம்மு துரை, த.ஆறுக்குட்டி உள்பட படட் டுக்கோட்டையார் நகர், வெள்ளி யங்காடு பகுதி மார்க்சிஸ்ட் கட்சியி னரும் அங்கு வந்தனர். மேற்குப் பகுதியில் குடியிருக்கும் அனைத்து வீடுகளைச் சேர்ந்தவர் களையும் இவர்கள் சந்தித்தனர். நீர் நிலைப் புறம்போக்கில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து இருப் போரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுவான உத்தரவை நீதி மன்றம் பிறப்பித்து உள்ளது. ஆனால் குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் எந்த மாதிரி நிலை உள்ளது என்று ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக நீதிமன்ற உத்தரவு என்று சொல்லி சாமானிய ஏழை, எளிய மக்கள் வசிக்கக்கூடிய பகு திகளில் நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது. எடுத்துக்காட்டாக, சாமளா புரம் பகுதியில் 140 ஏக்கர் அள வுக்கு குளம் உள்ளது என ஆவ ணங்களில் குறிப்பிடப்பட்டு இருந் தது. ஆனால் தற்போது சுமார் 97 ஏக் கர் மட்டுமே குளம் உள்ளது. மீத முள்ள 40 ஏக்கர் பகுதியில் குளம் இல்லை,
அதில் சில வசதி படைத்த வர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நீர் நிலைக்கு எவ்வகையிலும் பாதிப்பு இல்லா மல் நூறாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்க ளுக்கு வீடுகளைக் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட் டுள்ளது. நீர் நிலைக்கு அருகில் உள்ள பெரிய தொழிற்சாலை, வசதி படைத்தவர்களுக்கு உரிய இடங்களை விட்டு விட்டு, அதற்கு தள்ளி இருக்கக்கூடிய ஏழை, எளி யவர்களின் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள் ளது. இதுபோல் நீதிமன்ற உத்தரவு என சொல்லிக் கொண்டு, பாரபட்ச மான முறையில் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எனவே முறையாக ஆய்வு செய்து பாரபட்சம் இல்லாமல் சரி யான முறையில் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். பாதிக்கப்ப டும் மக்களுக்கு உரிய மாற்று ஏற் பாடுகளை செய்து தர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரம், வாழ் வுரிமை பாதிக்கும் வகையில் நிர் வாக நடவடிக்கை எடுக்கக் கூடாது, இது போல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு இப்பிரச் சனையில் உரிய தீர்வு காண உறுதி யுடன் முயற்சி செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால் ஆகியோர் கூறி னர். மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்க ளின் கருத்துகளை கவனமுடன் கேட்டறிந்த பொது மக்கள் இப் பிரச்சனையில் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க முழு ஒத்து ழைப்பு வழங்குவதாகவும் தெரி வித்தனர்.