திருப்பூர், அக். 28 – திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடான கல்குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தை யான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து குடிமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள எழில் புளூமெட்டல் கல்குவாரி நிறுவனம், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக, முறை கேடாக செயல்பட்டது உறுதிசெய்யப்பட்டு, மாநில புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரால் ரூ.10கோடியே 40 லட்சத்து 48ஆயிரத்து 207 அபராதம் விதிக்கப்பட்டுள் ளது. எனினும் இந்த அபராதத் தொகையை மாதம் ரூ.30 லட்சம் வீதம் செலுத்தலாம் என்று அவகாசம் அளித்தும், முழுஅபராதத் தொகையையும் செலுத்துவதற்கு முன்பே, மூடப்பட்ட கல் குவாரியை, உடனடியாக திறந்து இயக்கவும் சுரங்கத்துறை ஆணையர் அனுமதி அளித்திருக்கிறார்.
அவசரம் ஏன்?
முழு அபராதத் தொகையை செலுத்தும் வரை தவறு செய்த குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ஆனால் மாநில அரசின் முக்கியத் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே அபரா தத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்ப ளிப்பதும், உடனடியாக கல்குவாரி இயங்க அனுமதி அளித்திருப்பதும் சந்தேகத்தை ஏற் படுத்துகிறது. தவறு நிரூபிக்கப்பட்ட கல்கு வாரிக்கு இவ்வளவு அவசரமாக அனுமதி அளித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகி றது. அதுவும் அப்பகுதி விவசாயி விஜயகு மார் என்பவர் மேற்படி கல்குவாரி மீது தொடர்ச்சியாக புகார் கூறி வந்திருக்கிறார். அதில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவு பெரு கிய நிலையில்தான், நிர்ப்பந்தம் ஏற்பட்டு மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொண்டு குவாரிக்கு தற்காலிக தடை விதித்தது. எனினும் குவாரி உரிமையாளர் சென்னை சுரங்கத்துறை ஆணையரிடம் முறையிட்டு, தடையை நீக்க முடிந்திருக்கிறது. தவறு செய்யும் குவாரி உரிமையாளர்கள், அரசு நிர் வாகத்தில் செல்வாக்கு செலுத்தி, தப்பித் துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கி றதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவு
குறிப்பாக, திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி தாலுகாவில் ஏராளமான கல்குவா ரிகள் உரிமம் இல்லாமல், முறைகேடாக இயங்கியதை சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக தனி குழுவின் மூலம் கள ஆய்வு செய்து கண்டறிந்தது. உரிமம் பெறாத 64 கல்குவாரிகளை மூடி அதன் உரிமையா ளர்கள் மீது குற்றவழக்குகள் பதிந்து நடவ டிக்கை எடுக்கவும், இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக் கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டது. இதன் பிறகும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகளில் எவ்வித கள ஆய்வும் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுத்த தாகத் தெரியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமான வெடிமருந் துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்த்தெடுப்பதும், சுற்று வட்டார விவசாய விளைநிலங்கள் மற்றும் குடிமக்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.
கல்குவாரிகளை ஆய்வு செய்க!
எனவே தமிழக முதல்வர் இவ்விசயத் தில் நேரடி கவனம் செலுத்தி, திருப்பூர் மாவட் டத்தில் உள்ள கல்குவாரிகளை முழுமை யான ஆய்வுக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். அனைத்து பாதுகாப்பு மற் றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட் பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் கற்களை வெட்டியெடுப்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். தவறு செய்யும் கல்குவாரிகள் மீது முழுத்தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத் தரவிட்ட அடிப்படையில் முறைகேடான கல் குவாரிகளுக்கு உடந்தையாக செயல்படும் அரசுத் துறை அதிகாரிகள் யாராக இருந் தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு
அதேசமயம் கல்குவாரிகள் சட்டப்படி இயங்குவதை உறுதிப்படுத்துவதன் மூலம் அந்த குவாரிகளை நம்பி பிழைக்கும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க முடியும். விதிமீறலில் ஈடு பட்டு மூடப்படும் கல்குவாரிகளில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து கல்குவாரி தொழிலாளர்களை யும் நலவாரியத்தில் பதிவு செய்து அவர்க ளுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு, பணப்பலன் களை வழங்க வேண்டும். இதன் மூலம் குடி மக்கள், விவசாய விளைநிலங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்ப டுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.