districts

வாழை விவசாயிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இழப்பீடு வழங்குக!

திருப்பூர், அக்.10– அவிநாசி வட்டாரத்தில் தனியார் நிறுவன வாழைக்கன்றுகளை நடவு செய்து பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும் வாழை விவசாயி களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அவிநாசி அருகே உள்ள சேவூர் தண்டுக்காரன்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆண்டு காலமாக வாழைப் பயிர் விவசாயம் நடைபெற்று வருகிறது. பலத்த மழை, சூறாவளி போன்ற இயற்கை காரணங்களால் வாழை மரங்கள் முழு  வளர்ச்சி அடைந்து பலன் அளிப்பதற்கு முன்பே  சரிந்து விழுந்து விவசாயிகள் இழப்பைச் சந் திக்கும் நிலை ஏற்படுவதுண்டு. ஆனால், தற்போது தனியார் நிறுவனம் அதிக மகசூல் கிடைக்கும் என்று அளித்த வாக் குறுதியை நம்பி இந்த வட்டாரத்தைச் சேர்ந்த வாழை விவசாயிகள், அந்த நிறுவனத்தின் வீரிய ரக வாழைக்கன்றுகளை வாங்கி நடவு செய்துள்ளனர். ஆனால், வழக்கமாக வாழை முழு வளர்ச்சி பெற்று அறுவடை செய்யும் காலமான 13 மாதங்கள் ஆன பிறகும் இங்கு  பயிரிடப்பட்ட வாழைகளில் வாழைத்தார்கள் முழு வளர்ச்சி அடையவில்லை. வாழைத்தார் களில் ஒரு பகுதி வாழைக்காய்கள் முற்றிப் பழுத்தும், அதன் மேற்பகுதிகள் முழு வளர்ச்சி பெறாமல் பிஞ்சு நிலையிலும் இருக் கின்றன. இதனால் விவசாயிகளிடம் விளைந்த வாழைகளை வியாபாரிகள் விலை கொடுத்து  கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். வாழைப் பயிர் சாகுபடிக்கு ஒவ்வொரு விவசாயியும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ள னர். சற்றேறக்குறைய ரூ.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் தரப் பில் கூறப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டு காலத் திற்கு மேற்பட்ட பயிரான வாழை பாதிக்கப் பட்டிருப்பதால் அதை நம்பி வாழும் விவ சாயக் குடும்பங்கள் கடும் இழப்பைச் சந் திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம்  இவர்களுக்கு வாழைக்கன்றுகள் வழங்கிய  தனியார் நிறுவனம் இந்த இழப்புக்குப் பொறுப் பேற்க மறுப்பதாகத் தெரிகிறது. அவிநாசி வட்டாட்சியர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தஞ்சை வாழை ஆராய்ச்சி நிறுவ னத்தினர், கோவை வேளாண் பல்கலைக் கழகத்தினர் நேரில் கள ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக் கும் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் திருப்பூர் மாவட்ட நிர் வாகம் காலதாமதமின்றி, உரிய நடவடிக்கை எடுத்து, வாழை விவசாயிகளுக்கு ஏற்பட்டி ருக்கும் இழப்புக்கு உரிய முழு இழப்பீடு வழங்கவும், வீரிய ரகம் என்று சொல்லி இந்த விவசாயிகளுக்கு வாழைக்கன்றுகளை வழங் கிய தனியார் நிறுவனத்தினர் இப்பிரச்சனை யில் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும், தவ றும் பட்சத்தில் அந்நிறுவனத்தினர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு விவசாயிகளைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி நிவாரணம் வழங்க வேண் டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட் டுள்ளது.