ஈரோடு, ஜன.7- குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத் தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மூலப்பாளையம் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். நோய்த்தொற்று ஏற்படுத்தும் சாக் கடை கால்வாய்களை சரிசெய்ய வேண் டும். பழுதடைந்த மின்கம்பங்கள் அகற்ற வேண்டும். சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க் சிஸ்ட் கட்சியினர் ஈரோடு மாநகராட்சி 4 ஆவது மண்டல அலுவலகத்தில் குடியே றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து மண்டல உதவி ஆணையர் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறை வேற்றி தருவதாக எழுத்துபூர்வமாக தெரி வித்தார். இதனால், குடியேறும் போராட் டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப.ராஜா, பி.லலிதா, விதொச மாவட்ட துணைத் தலைவர் எம்.நாச்சிமுத்து, தாலுகா குழு உறுப்பினர் எம். சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.