கோவை, மே 7- மக்கள் தலையில் முள் கிரீட மாக பாஜக உள்ளது என மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறி வுள்ளார். காரல் மார்க்சின் 205ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனியன்று சித்தாபுதூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் தலைமை ஏற்றார். கிழக்கு நகர செயலாளர் எம்.செல்வ ராஜ் வரவேற்புரையாற்றினார். கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், பாஜக ஆதரவு அமைப்பு களின் முயற்சியால் கேரளா ஸ்டோரி என்ற சர்ச்சைக்கு உண் டான படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதோடு, மத ஒற்று மையை சீர்குலைக்கிறது. பாஜக. மதவெறுப்பை தூண்டுகிற பாஜக தில்லி ஸ்டோரி, குஜராத் ஸ்டோரி, உத்தர பிரதேச ஸ்டோரி போன்ற படங்களை எடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினர். மார்க்ஸ் உலக தத்துவங்களை கொடுத்த விஞ் ஞானிகளில் மிகச்சிறந்தவர். அவரை அறிந்து கொள்ளும் வகை யில் எளிய நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு உள்ளன. மனித சமூகத்தை விடுதலை செய்கிற உபரி மதிப்பு கட்டுரையை வழங்கியவர் என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் பேசுகையில், மார்க்சை பற்றி எத்தனையோ அறி ஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத சமூக விஞ்ஞானி யாக மார்க்ஸ் திகழ்கிறார். உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கம் அவரின் நூற்றாண்டு களை கொண்டாடி வருகிறது. கேரளா ஸ்டோரி வெளியாகியுள்ள அதே நேரத்தில், கேரளாவில் தோல் சீலை போராட்டத்தின் போது முலை வரி வசூல் செய்த பிரிட்டிஷ் ஆட்சி கால அடக்கு முறைகளை எடுத்துரைக்கும் “19 ஆம் நூற்றாண்டு” என்ற திரைப் படம் கேரளாவில் வெளியிடப் பட்டுள்ளது. எப்படிப்பட்ட சமூக ஒடுக்குமுறைகளை மனித சமூகம் சந்தித்தது என்பதை விளக்குகிற அருமையான படம்.
வெறுப்பு அரசியலை மட்டுமே மக்கள் மத்தியில் விதைக்கின்ற பாஜக, தான் தேசபக்தி என கூறிக் கொண்டு மூவர்ண கொடியை கூட ஏற்க மறுக்கின்றனர். அதேபோல தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை இரு முறை இசைக்கச் செய்து அதனை அவமானம் படுத்துகிற செயலில் ஈடுபடுகிறார். இவர்களுக்கு தேசப்பற்றும் தெரியாது, தேசிய கீதத்தின் மதிப்பும் தெரியாது. பாஜக ஆட்சிக்காலத்தில் 13 சதவிகித வேலைவாய்ப்பை பறித்தது தான் சாதனையாகும். மற் றொருபுறம் வேலைவாய்ப்பை வழங்குவதாக பொய் பிரச்சாரத் தில் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகள் கூடுதலாக வழங்கும் சிறு, குறு தொழில்களுக்கு எந்த கவனமும் செலுத்தாமலும், உதவி செய்யாமல் மாற்றான் தாய் பிள்ளைகளைப் போல நடத்து கிறது. ஆனால், பெரு முதலாளி களுக்கு சலுகைகளை தாராளா மாக வழங்குகிறது. கோவையில் சிறு, குறு அமைப்பு தொழில் முனைவோர் களை இணைத்து இரண்டு மாநில அமைச்சர்கள் பங்கேற்ற சிறு தொழில்கள் மாநாடு சமீபத்தில் நடத்தப்பட்டது. நாம் தமிழ்நாடு முதல்வரை கேட்டுக் கொள்வது, இந்தியாவில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு களை வழங்குவது சிறு, குறு தொழில்களுக்கு கூடுதலான உதவி களை மாநில அரசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண் டார்.
உழைக்கும் மக்கள் காலந் தோறும் படுகின்ற இன்னல்கள் குறித்து மார்க்ஸ் முன்னதாகவே குறிப்பிட்டுள்ளார். நவீன காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அனைத்தும் முதலாளித்துவத் தினை பாதுகாப்பதற்கான செயற் குழுவாகவே செயல்படுகிறது. ஒன்றிய அரசு, தேசத்தின் பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் தீவிரமாக செயல்படுகிறது. கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலை யத்தை ஏலம் விட்டது. அப்போது கேரளா அரசு, விமான நிலை யத்தை தாங்களே நடத்துவதாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத் தது. ஆனால் ஒன்றிய அரசு, விமான நிலையத்தை தனியாருக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், ரூ.12,500 கோடி கடனை குறைந்த வட்டிக்கு வழங்கி உதவி செய்துள் ளனர். கடந்த மார்ச் 10 தேதியன்று மத்திய பிரதேசத்தில், ராம நவமி யன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத் தியது. அப்பேரணியானது இஸ் லாமிய பகுதிகளில் சென்றது. ஆனால் எந்த காலத்திலும் ஆர்எஸ்எஸ் பேரணியானது பட் டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி கள் வழியாக செல்லாது. இந்த பேரணியில் இரண்டு கருவுற்ற பசுக்கள் வெட்டி தெருக்களில் வீசப் படுகிறது. இந்த செயலை அகில இந்திய இந்து மகா சபா நிர்வாகிகள் நான்கு பேர் இந்த வேலையைச் செய்கின்றனர். இந்த செயல் இஸ்லாமியர்கள் நிகழ்த்தியது போல் செய்திகள் பரப்பப்படு கின்றன.
இந்திய தேசத்திற்கான பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கையை முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் சுவாமி குமாரானந்தா ஆகி யோர்கள். சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாடுகிற ஆர்எஸ்எஸ் வகையறாக்கள், அபுல் கலாம் ஆசாத்தை கொண் டாட மறுக்கின்றனர். அப்துல் கலாம் ஆசாத் மத கடமை, தேசக்கடமை, மக்கள் பற்று என வாழ்ந்தவர். இவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என முன்மொழிந்த போது அதை வேண்டாம் என மறுத்தவர். வரலாற்றில் உண் மைக்கு மாறாக சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாடிவிட்டு, அவர் பெயரில் உள்ள விளை யாட்டு மைதானத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டவரே தேசத்தின் பிரதமர் மோடி. இந்த தேசத்திற்கான எல்லா வகை யிலும், சுமையாக மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள முள் கிரீடமா கவும், சுமை தாங்கியாகவும், பெரிய நஞ்சாகவும் திகழ்வது ஆர்எஸ்எஸ் என குறிப்பிட்டார். மக்களை நேசிக்கின்ற மனித சமூகத்திற்கு விஞ்ஞான ரீதியாக விடுதலையைப் பெற்றுத் தர உழைத்த உலக சமூக விஞ்ஞானி களின் போற்றப்படுகிற, காரல் மார்க்சின் 205 ஆம் ஆண்டு பிறந்த நாளில் போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப் போம் என சபதம் ஏற்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ண மூர்த்தி, யு.கே சிவஞானம், வி.தெய் வேந்திரன், ஏ.மனோகரன், ஆறுச் சாமி, கே.அஜய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பீளமேடு நகர குழு செயலாளர் கே.பாண்டியன் நன்றி கூறினார்.