சேலம், ஜூன் 19- அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் வாலிபர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இளைஞர்களின் ராணுவ கனவை சீர்குலைத்து, நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக் கும் ஒன்றிய அரசை கண்டித்து சேலத்தில் மார்க்ச்சிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.வி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில், சேலம் வடக்கு மாநகர செயலா ளர் என்.பிரவீன்குமார், மாநகரக் குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். மோடி அரசின் அக்னிபாத் திட் டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் ஆவேச போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக சேலம் ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு டி.கண்ணதாசன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் வி.வெங்கடேஷ், பொருளாளர் வி.ஜெகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார், முன் னாள் மாவட்ட பொருளாளர் எம். கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.