districts

img

தனியார் காகித ஆலையால் சூழலியல் கேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 17- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தனியார்  காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகையில் இருந்து கருந்தூசி, சாம்பல் பவுடர், உள்ளிட்டவை குடியிருப்பு பகுதிகளான ஆயக்காட்டூர் கிராம பகுதி முழுவதும்  படர்வதால், பொதுமக்கள் சுத்தமான குடி நீரை அருந்த முடியாமலும் உணவு கூட சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்கள் பலருக்கு ஆஸ்துமா, அலர்ஜி, உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்கள்  ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், ஆலையில் இருந்து  வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுகி றது. எனவே, சூழலியலுக்கும், பொதுமக்களுக்கும் கேடு விளைக்கும் தனியார் காகித ஆலையின் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் காகித ஆலை வளா கப்பகுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிபாளை யம் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித் தார். இதில், சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன், வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன் மற்றும் ஒன் றிய குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்று கோரிக்கை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.