districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கட்டட உரிம கட்டணம் உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

பென்னாகரம், ஆக.1– பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் கட்டட உரிம கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இத்தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி மன்ற  சாதாரண கூட்டம் திங்களன்று நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பிருந்தா தலைமை வகித்தார். இதில், பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள் பத்மா, சரிதா, பூங்குழலி, விஸ்வ நாதன், ஜபியுல்லா, கல்பனா, தர்மலிங்கம் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய கட்டடம் கட்ட விண்ணப்பிப்பவர்களுக்கு, தரை மட்ட கட்டடம் முதல் தளம் இரண்டாம் தளம் ஆகியவற் றுக்கு உரிமை கட்டண விகிதம் சதுர அடி ரூ.2 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது ரூ.5  ஆக உயர்த்தியும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான கட்டண விகிதம் சதுர அடி ரூ.2 ஆக இருந்தது ரூ.15 ஆக உயர்த்திடவும் தீர்மா னம் முன்மொழியப்பட்டது. மேலும், கதவு, ஜன்னல், கழிவு நீர்த்தொட்டி, மாடிப்படி என ஒவ்வொரு இனங்களுக்கும் ஏற்க னவே வசூலிக்கப்பட்ட கட்டண விகிதத்தை உயர்த்தி வசூ லிக்க தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்த கட்டண விகிதம் உயர்வு 150 சதவீதத்திலிருந்து 650 சத வீதம் வரை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஏழை  நடுத்தர மக்களையும், வணிகர்கள் மற்றும் தொழில் முனை வோரை கடுமையாக பாதிக்கும். கட்டண விகிதங்களை நிர்ண யிக்கும் உரிமை பேரூராட்சி மன்றத்துக்கு உண்டு. எனவே கட் டட உரிம கட்டண விகிதங்களை உயர்த்தக்கூடாது என மார்க் சிஸ்ட் கட்சியின் மன்ற உறுப்பினர் விஸ்வநாதன் வலியுறுத் தினார். இதனைத்தொடர்ந்து இத்தீர்மானம் நிறைவேற்றப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

நாமக்கல், ஆக.1- குமாரபாளையத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இதனால் நடந்து செல்பவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தெருநாய் களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நகராட்சி நிர்வாகத்தை வலி யுறுத்தினர். அதன் அடிப்படையில் நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் சட்ட விதிகளுக்குட்பட்டு தெரு வில் சுற்றிதிரியும் நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி மற் றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக தற்போது குமாரபாளையம் நகர் பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நல்லம்பள்ளி: கடைகளை இடித்து  ஊராட்சி மன்ற தலைவர் அராஜகம் 

தருமபுரி, ஆக.1- கடைகளை இடித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அடி யாட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர், தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்ப தாவது, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மானிய தள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக இரண்டு கடைகள் உள்ளன. அதில் எலக்ட்ரிக் பொருட்கள் விற் பனை செய்யும் கடையும் நடத்தி வந்தேன். அந்த கடைகளை சட்ட விரோதமாக ஜேசிபி எந்திரம் மூலம் அராஜக முறையில் அடியாட்களுடன் வந்து ஊராட்சி மன்ற தலைவர் இடித்துள் ளார். மேலும், கடைகளில் இருந்து எனது உடைமைகளை முற் றிலும் அழித்து மின் இணைப்பு சாதனங்கள் உட்பட அனைத்து பொருட்களையும் நொறுக்கி, சுமார் ரூ.15 லட்சம் மதிப் பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார். எங்கள் குடும்பத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்து எங்கள் வாழ் வாதாரத்தை அழித்துள்ளார்.  ஊராட்சி  தலைவர் மீது தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு ஊராட்சி தலைவர் மீதும், அவர்களது அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில் கடைகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காவிரி ஆற்றங்கரையில் குளிக்க தடை

நாமக்கல், ஆக.1- பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரை யில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பேனர் கள் கட்டப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்ததால், காவிரி ஆறு தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு, உள்ளூர் பண்டிகை திரு விழாவை ஒட்டி ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் பள்ளிபாளையம் காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளான ஜனதா நகர், அக்ரஹாரம், ஆவத்திபாளையம், ஆவரங் காடு, பெரியார் நகர், வசந்த நகர், காவேரி ஆர்எஸ் உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தின்  வழிகாட்டுதல்படி காவிரி ஆற்றங்கரையில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக் கப்பட்டுள்ளது.ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபடுவார்கள், என்றார்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஆக.1- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற் பனைக்கு கொண்டு வருகின் றனர். இந்த அங்காடிக்கு திங் களன்று 2,526 கிலோ பட்டுக் கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.505க்கும், குறைந் தபட்சமாக ரூ.287க்கும், சரா சரியாக ரூ.441.21க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 14 ஆயிரத்து 817க்கு விற்பனை செய்யப்பட்டன.

தீரன் சின்னமலை நினைவு நாள் நாளை உள்ளூர் விடுமுறை

திருப்பூர் ஆக.1- சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு வியாழனன்று (நாளை) திருப்பூர் மாவட் டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழைய கோட்டை கிராமம், மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரா டிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படு கிறது.இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் திருப் பூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறு வனங்களுக்கு ஆகஸ்ட் 26 (சனியன்று) ஈடுகட்டும் பணி  நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் கூறியுள்ளார்.

மாநகராட்சி லாரி மோதி தொழிலாளி பலி

திருப்பூர், ஆக.1- திருப்பூர் பெருமாநல்லூர் சாலை போயம்பாளையம் அருகே பூலுவப்பட்டியில் இருந்து தொழிலாளி மகேந்திரன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் பெருமாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரின் பின்னால் வந்த  மாநகராட்சி குப்பை லாரி எதிர்பாராதமாக முன்னாள் சென்ற  மகேந்திரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது  மோதியது. இதில் மகேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். லாரியின் பின் பக்க சக்கரம் மகேந்திரன் மீது ஏறி இறங்கி யது. இதில் மகேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  மகேந் திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூ மார்க்கெட் பிரச்சனை: முட்டுக்கட்டை போடுவது யார்?

திருப்பூர், ஆக.1- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பூ மார்க் கெட் வளாகத்தை ஒப்பந்ததாரர் பணம் கட்டி எடுத்திருக்கி றார். மூன்று மாதமாக வாடகைக்கு விடாத போது இழப்பு ஏற்ப டும் ஒப்பந்ததாரரின் நம்பிக்கை பாதிக்கப்படும். அதேசம யம் வேளாண்மை மார்க்கெட்டிங் கமிட்டி இடத்தில் உள்ள  பூ மார்க்கெட் தற்காலிக கடைகளையும் அகற்ற 31 ஆம்  தேதி (திங்கள் கிழமை) கெடு நீதிமன்றத்தால் விதிக்கப் பட்டுள்ளது. இப்பிரச்சனையில் யார் முட்டுக்கட்டையாக இருக்கிறார் கள். நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி செயல்பட வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வந்தால் அது கவுன்சிலர்களான எங்களுக்கும் அவமானம். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இப்பிரச்சனை விரைவில் தீர்க்கப் படும் என்று மேயர் கூறினார். மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டாலும் அரசின் மூலம் அது நிறைவேற்றப்படும் என்று மேயர் கூறினார்.

நொய்யல் வீதியில் அரசு இடத்தை தனியார்  ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

திருப்பூர், ஆக.1– திருப்பூர் நொய்யல் வீதி பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு தேவையான அரசு இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக மாமன்ற கவுன் சிலர்கள் குற்றம் சாட்டினர். நொய்யல் வீதி தொடக்கப் பள்ளிக்கு அங்கு படிக்கும்  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை.  எனவே அதன் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை  பள்ளி வகுப்பறைக்கு பயன்படுத்தலாம் என்று ஏற்கனவே மாந கராட்சி மேயர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதை தனி யார் ஆக்கிரமித்து பட்டா பெறுவதற்கு முயற்சி செய்து கொண் டிருக்கிறார். அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர். அந்த இடத்திற்கு நீதிமன்ற ஆணையும் உள்ளது அதை மீறி எப்படி அதிகாரிகள் செயல்படலாம் என்று  அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப் பினர். இப்பிரச்சனையில் 1912 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆவணங்களையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வைத்து  மாநகராட்சி வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை கேட்டுள் ளது. மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்று மேயர் தினேஷ்குமார் கூறினார். தாய் மூகாம்பிகை  நகரில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி பயன்படுத்தப்படா மல் உள்ளதை பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி கவுன் சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்தப் பணியை செய்த ஒப்பந்ததாரர் அதன் மதிப்பை விட ரூ.67 லட்சம் கூடு தலாக பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அதன் மீது அபராதம் விதிக்கும் நிலை உள்ளது என்று மேயர் பதில ளித்தார்.

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தேர்தல்

உடுமலை, ஆக.1- திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவுக்கான தேர்தலில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் பிஏபி., திருமூர்த்தி அணை பாசனத்தில்  3 லட்சத்துத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசன வசதி பெற்று  வருகிறது. இதில், மொத்தமாக 134 பாசன சங்கம், 9 பகிர்மான  குழு தலைவர், 45 பகிர்மானக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நடந்த நிலையில், திட்டக்குழு தலை வர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக் கப்பட்டது.  இந்நிலையில்,  திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் களுக்கான தேர்தல் ஆக.1 ஆம் தேதி  நடத்த திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் உத்திரவு பிறப்பித்திருந்தார். உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில், திட்டக்குழு தலைவர் பத விக்கு காலையிலும், திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர் தல் மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிஏபி திட்ட்டக்குழு தலைவர், மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு உடுமலை கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பகிர்மான குழுக்களின் தலைவர்கள் அசல் தேர்தல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என  தெரிவித்திருந்தனர். தேர்தலில் திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். இதில், திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற் றும் திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  இவர் களுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.

சிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.1- மணிப்பூர் மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாது காப்பு வழங்கிட வலியுறுத்தி கிறிஸ்துவ முன்னணி சார்பில்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஞாயிறன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் சரவணன் மற்றும்  மாநில செயலாளர் தங்க வேலாயுதம் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் அனைத்து இஸ்லா மிய அமைப்பு தலைவர்கள் பலர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

கொடநாடு வழக்கு:  நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.1- முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் கொடநாடு பங் களாவில் அவரது மறைவுக் குப் பிறகு எடப்பாடி பழனிச் சாமி ஆட்சிக்காலத்தில் நடை பெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆட்சி  பொறுப்பேற்று 90 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தேர் தல் வாக்குறுதியில் திமுக  அறிவித்தது. இந்நிலையில், இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என வலியு றுத்தி திருப்பூர் தியாகி கும ரன் நினைவகம் முன்பு செவ் வாயன்று அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி

கோவை, ஆக.1- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ 7.68 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் சூசையபுரத்தை சேர்ந்தவர் நவீன் குமார் (33). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அப்போது கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த பரத்குமார் மற்றும் ஹரி கிருஷ்ணன் அவருக்கு அறிமுகம் ஆகினர். அப் போது இருவரும் சுற்றுலா துறையில் அதிகாரிகள் பலர் தங்க ளுக்கு தெரியும் எனவும், அவர்கள் மூலம் அரசு வேலை  வாங்கித் தருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த வேலை கிடைக்க சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறிய தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நவீன்குமார் ரூ.7.68 லட்சத்தை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. நவீன்குமார் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அரசு வேலை  வாங்கித் தருவதாக ஏமாற்றி நவீன்குமாரிடம் ரூ.7.68 லட் சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து நவீன் குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித் தார். புகாரின் பேரில், போலீசார்  பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவு களில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

பொதுமக்களுக்கு தற்காப்பு நிகழ்ச்சி

சேலம், ஆக.1- சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவ லகத்தில், பொதுமக்கள் மழைக்காலம் மற்றும் பேரிடர் காலங் களில் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, தண்ணீரில் பொதுமக்கள் யாரேனும் மூழ்கி தத்தளிக்கும் போது அங்கு உள்ள உபகரணங்களை வைத்து தங்களைப்  எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகள், ஒரு வர் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருக் கும் நிலையில் அவரை காப்பாற்றிய பின் முதலுதவி செய்து  எப்படி அவரை காப்பாற்றுவது என்ற செய்முறை விளக்கங்க ளும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தமிழ ரசி, துணை வட்டாட்சியர் ஸ்ரீரங்கநாதன் உட்பட பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பருத்தி ஏலம்

நாமக்கல், ஆக.1- நாமக்கல் மாவட்டம், அக் கரைப்பட்டியில் உள்ள  வேளாண்மை உற்பத்தியா ளர் கூட்டுறவு விற்பனை சங் கத்தில் பருத்தி ஏலம் நடை பெற்றது. பல்வேறு பகுதிக ளைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு  கொண்டு வந்திருந்தனர். ஆத் தூர், ஈரோடு, சேலம், பெருந் துறை, திருப்பூர், திருச்செங் கோடு, மகுடஞ்சாவடி, கொங் கணாபுரம் சுற்றுவட்டார பகு திகளைச் சேர்ந்த வியாபாரி கள் பருத்தியை ஏலம் எடுத்த னர். சுரபி ரகப்பருத்தி 364  மூட்டைகள் கொண்டு வரப் பட்டன. இதில் பருத்தி குவிண் டால் ரூ.7,301 முதல் ரூ.8,147 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி, ஆக.1- தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள் ளிக்கிழமை நடைபெறும். அதன்படி, ஆக.4 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற உள்ளது. வருவாய் கோட்ட அலுவ லர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், சம் பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட் டாட்சியர் கீதாராணி தெரிவித்துள்ளார்.

மனைப்பட்டா கேட்டு அருந்ததிய மக்கள் மனு

தருமபுரி, ஆக.1- வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் அருந்ததிய மக்கள் மனு அளித் தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யம், தடங்கம் ஊராட்சிக்குபட்டது கக்கன்ஜி புரம். இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இக்கிராமம் தருமபுரி நகரத்திற்கு மிக  அருகாமையில் உள்ளது. இங்குள்ள அருந்த திய மக்களுக்கு விவசாய நிலம் இல்லை. பல வருடங்களுக்கு முன் அரசு கொடுத்த தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இதில் பல தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளது. தினந் தோறும் கூலி வேலை செய்து பிழைத்து வரும், இம்மக்களின் பல பேருக்கு சொந்த வீடு இல்லை. ஒரே வீட்டில் இரண்டு, மூன்று  குடும்பங்களாக வாழ்ந்து வரும் அவலநிலை நிலவுகிறது. எனவே, அருந்ததிய மக்களுக்கு  இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.