districts

img

காலமானார்

கோவை, டிச.30– மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியக்குழு முன் னாள் உறுப்பினர் பி.சுரேஷ் வியாழனன்று அகால மரணமடைந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன் பாளை யம் ஒன்றியக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புக ளில் திறம்பட பணி யாற்றியவர் தோழர் பி.சுரேஷ். இவர், மார்க்சிஸ்ட் கட்சியின் யூனியன் டேங்க்  கிளை செயலாளராக செயலாற்றி வந்தார். இந்  நிலையில், பெரியநாயக் கன் பாளையத்தில் நடை பெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த சனியன்று சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரத விதமாக வாகனத்தி லிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தா நிலையில், சிகிச்சை பல னின்றி வியாழனன்று உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட்  கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.