திருப்பூர், செப். 19 - திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலை யத்தில் செவ்வாயன்று தியாகிகள் தின சிறப்புக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளை தலைவர் குமரவேல் தலைமை ஏற்றார். அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கச் (ஏஐபிடிபிஏ) செயலாளர் விஸ்வநாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், ஏஐபிடிபிஏ நிர்வாகி கணேசன் ஆகியோர் தியாகிகளின் தியா கத்தை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். ஏஐபிடிபிஏ சார்பில் பழனிவேல்சாமி நன்றி கூறினார்.