சேலம், ஜன.20- துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய தியாகிகளின் நினைவு தினம் புத னன்று அனுசரிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் களின் நினைவு தினம் புதனன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகமான வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு சாலை போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதேபோல், சேலம் ரயில்வே கூட்செட் முன்பு சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் மதியழகன் தலைமை யிலும், ஜங்ஷன் ரயில்வே கூட்செட்டில் முருகன் தலைமை யிலும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம் மேளன மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி, சிஐ டியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சேலம் கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தலைவர் செம்பொன், துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்தி ரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், ரயில்வே ஏற்றுமதி- இறக்குமதி தொழிற்சங்க பொருளா ளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி உதகையில் சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் தலைமையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட் டது. இதில் சிஐடியு துறைவாரி சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.