districts

img

நேதாஜி பாராட்டிய தியாகி சிவகாமி அம்மாள்

சுதந்திர போராட்ட வேட்கையை பாடல்கள், நாடகத் தின் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றவர் தியாகி சிவ காமியம்மாள். தருமபுரி நகரம் அன்னசாகரத்தில் குடியி ருந்துவருபவர் சிவகாமியம்மாள் (90).  இவரை சந்தித்த போது, தனது கம்பீர குரலில் வெள்ளையனை நாட்டை  விட்டு விரட்டுவோம் என்கிற தேசபக்த பாடலை பாடி வர வேற்கிறார்.  1942 ஆண்டு காலகட்டத்தில், சிவகாமியின் தந்தை  மாரிமுத்து, தாயார் சின்னதாயி, குடும்பத்துடன் மலேசியா கோலாலம்பூ ருக்கு பிழைக்க சென்றனர். அப்போது சிவகாமிக்கு வயது 11. இவரது அண்ணன் பரந்தாமனுக்கு 15 வயது. 1942 ஆண்டில்  இந்தியாவில்  வெள்ளை யனே வெளியேறு  போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போதுதான்  இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை வெளியேற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஷ் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவினார். இந்திய சுந்திரத்துக்காக வெளிநாட்டில் வசித்து வந்த இந்தியர்களும் போராடினர். இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவு பாலசேனா அமைப்பை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினார். இந்திய சுதந்திர விடுதலை வேட்கையின் காரணமாக சிவ காமி பாலசோன அமைப்பில் இணைந்தார்.  மலேசியாவில் இந்திய படைக்கு,  ஆள்சேர்க்கும் நடவடிக்கையாக சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலையில்,  

வீர வனிதா என்ற நாடகத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில், சிவகாமி நடித்தார். இவரின் நடிப்பை பார்த்த  நேதாஜி,  சிவாகாமியை பாராட்டினார். வீரம் செரிந்த இந்த நாடக்கத்தை பார்த்து ஜான்சிராணியின், பெண்கள் படைபிரிவில் பலரும் இணைத்து கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயேர்களின் படை,  இவர்கள் தங்கியி ருந்த சமூக நலவிடுதிக்கு குண்டு போட்டனர். இதில் சிலர் இறந்தனர். சமூக நல விடுதியை ஆங்கிலேயர் படை கைப்பற்றினர்.  சிவகாமியை, நாடகம் நடிக்க ஆங்கிலேயர் வற்புறுத்தினர். அவர் நாட கம் நடிக்க மறுக்கவே முகாமை விட்டு வெளியேற்றினர். இதனால் மலேசியா கோலாலம்பூரில் இருந்து 1945 ஆம் ஆண்டு  சிவகாமியும் அவரது குடும்ப மும் இந்தியாவிற்கு திரும்பினர். சொந்த ஊரான தருமபுரி அன்னசாகரத்தில் வசித்த சிவகாமிக்கு 20 வயதில் திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளிலே கணவர் இறந்தார். தனிமையில் இருக்கும் இவர் வாடகை வீட்டில் வசித்து வரு கிறார். இந்திய நாடு விடுதலை பெற்று வெள்ளி விழா ஆண்டான 1973 ஆம்  ஆண்டு,  தமிழக  அரசு சார்பில், விடுதலை போரில் ஈடுபட்ட தியாக செம்மல் சிவாகமி அம்மையாருக்கு,  செம்பு பட்டையம், சான்றிதழ் வழங்கி கௌர வித்தது. அதன்பின் 1995ம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையெட்டி பாராட்டு பட்டையம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 90 வயதாகும் சிவ காமியம்மாள் நம்மோடு வாழும் வரலாறாக வலம் வருகிறார்.