districts

img

மனைப்பட்டா கிடைத்தும் பலனில்லை ஆதிதிராவிடர் மக்கள் வேதனை

அவிநாசி, ஜன.22- அவிநாசி அருகே 27  ஆண்டுகளுக்கு முன் வழங் கப்பட்ட 60க்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், வரு வாய் ஆவணங்களில் உரிய பதிவு இல்லாததால் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, பழைய ஆதிதிராவிடர் காலனியில் ஏராள மான குடும்பத்தினர், கடந்த 80 ஆண்டுக ளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி பொது மக்களின் தொடர் கோரிக்கையாக 60க்கும்  மேற்பட்ட குடும்பத்தினருக்கு 1994 ஆம்  ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங் கப்பட்டது. ஆனால், இப்பட்டாக்கள் அனைத்தும் வருவாய் ஆவணங்களில் இடம் பெறாததால், வங்கி கடன் கிடைப்ப தில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், வாரிசுதா ரர்கள் பெயர் மாற்றம் செய்ய அதிகாரிக ளிடம் கேட்டபோது, பட்டாக்களுக்கான எவ்வித சான்றுகளும் இல்லை என கூறுகின் றனர். எனவே, இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.வரதரா ஜன் உள்ளிட்டோர் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.