districts

தாராபுரத்தில் தக்காளியை திருடியவர் கைது

தாராபுரம், ஜன.12-  கடந்த சிலநாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை  ரூ.120 வரை விற்றது. பொதுமக்கள் தக்காளி வாங்கவே  சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த டிச.28 அன்று  தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த தக் காளி வியாபாரி சீனிவாசன் (28), என்பவர் வெளியூ ரில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து சரக்கு  வாகனத்தில் கொண்டு வந்துள்ளார். மறுநாள் அதி காலை தாராபுரம் மார்க்கெட்டுக்கு தக்காளிகளை கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக வாக னத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அதனை  தொடர்ந்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாக னத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மீதமிருந்த தக் காளி பெட்டிகளை சரிபார்த்த போது சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தக்காளி பெட்டிகளை மர்ம நபர் திருடிசென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகு றித்து தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். புகாரின்பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தரும புரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த விஜய குமார் (28), என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந் தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை யினர் அவரிடமிருந்து தாக்காளி விற்ற பணம் ரூ.10  ஆயிரம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய வாக னத்தை  பறிமுதல் செய்தனர். பின்னர் தாராபுரம் குற்றவி யல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.