districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குட்கா பொருட்கள் கடத்திய நபர் கைது

நாமக்கல், செப்.23- நாமக்கல் அருகே குட்கா பொருட்கள் கடத்திய நபரை  பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை பரி சோதனை செய்தனர். அந்த வேனில் தமிழ்நாடு அரசு தடை  செய்யப்பட்டிருந்த குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குட்கா பொருட்கள் பறி முதல் செய்து, அவற்றை கடத்திய நபரையும் காவல்  துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பதும், சேலத்தில் இருந்து  குட்கா பொருட்களை வேனில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.  இதையடுத்து, ஜெயக்குமாரிடம் இருந்து ரூ.45 ஆயிரம்  மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த  காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும்  பறிமுதல் செய்தனர். பின், ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு  செய்து, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை

கோவை, செப்.23- புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. இது குறித்த மாவட்ட நிர்வாகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உச்சநீதி மன்ற உத்தரவின்படி, குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்  தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங் கப்படும். அதன்படி பல்வேறு மாநிலங்களி லிருந்து வந்த புலம் பெயர் தொழிலாளர் கள் eShram Portal-லில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக நிரந்தர மாக வசித்து வருகிறார்கள். சிலர் குடும்பத் தில் உள்ள ஒரு சிலர் தான் சார்ந்த மாநிலத் தில் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் e Shram Portal-லில்  பதிவு செய்துள்ள புலம் பெயர் தொழிலாளர் கள் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து  தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங் களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவல கங்களில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

குன்னூரில் 30 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்

உதகை, செப்.23- குன்னூர் நகரில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 6 கடைகளில் விற்ப னைக்கு வைத்திருந்த 30 கிலோ பழைய  கோழி இறைச்சியை பறிமுதல் செய்து  அழித்தனர்.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு  ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரி ழந்தார். இதனை தொடர்ந்து மாநிலம்  முழுவதும் உள்ள அசைவ உணவகங் களில் உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டு காலா வதியான உணவு பொருட்களை பறி முதல் செய்து அழித்து வருகின்றனர்.  அதன்படி, குன்னூர் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும்  சில ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில்  காலாவதியான உணவுப் பொருட்கள்  விற்பனை செய்வதாக வாடிக்கையா ளர்களிடம் இருந்து உணவு பாது காப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்  கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நீலகிரி  மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில், குன்னூரில் உள்ள பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகள் என 20க்கும் மேற் பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். அப்போது, 6 கடைகளில் 30 கிலோ  பழைய கோழி இறைச்சி வைத்திருந்தது  தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித் தனர். மேலும், அந்த கடைக்கு தலா  ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், குன்னூர்  பகுதியில் கலப்பட தேயிலை தூள் டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.  மேலும், தடை செய்யப்பட்ட பான்  மசாலா மற்றும் புகையிலை பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெட்டிக்கடையில் தடை  செய்யப்பட்ட பான் மசாலா விற்பனை  செய்பனை செய்வது தெரிய வந்தது. அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்  விதித்தனர்.

2 மான்கள் பலி

திருப்பூர், செப்.23- திருப்பூர், வஞ்சிப்பாளை யம் ரயில் நிலையம் அருகே 2 மான்கள் ரெயி லில் அடிபட்டு இறந்து கிடந் தது. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றினார்கள்.பின்னர் இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினரிடம் உயிரிழந்த மான்களை போலீசார் ஒப்ப டைத்தனர். மேலும், ரயிலில் அடி பட்டு இறந்தது 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும்.