தருமபுரி, ஜன.2- பென்னாகரம் வனச்சரகத்தில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந் தது. கர்நாடகா மாநில வனப்பகுதிகளில் வறட்சி நில வும்போது, யானைக்கூட்டங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வருகின்றன. தற்போது ஒகேனக் கல் வனப்பகுதியில் இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்களிலிருந்து யானைகள் பிரிந்து, அவ்வப் போது பென்னாகரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிக்குள் நுழைகின்றன. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதியில் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகிய 40 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை, பென்னாகரம் வனச்சரகத் திற்கு உட்பட்ட பேவனூர் காப்புக்காடு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட பென்னாகரம் வனத்துறையினர் அந்த யானையைக் கண்டுள்ளனர். யானையின் நட மாட்டத்தைக் கண்காணித்து வந்த வனத்துறை யினர், திங்களன்று காலை பேவனூர் காப்புக்காடு பகுதிக்கு உட்பட்ட ஐநூறுகுட்டை பகுதியில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி ஓடையில் கீழே விழுந் துள்ளது. இதனைக் கண்ட வனத்துறையினர், ஓசூர் மண்டல உதவி கால்நடை மருத்துவர் பிரகாஷ் உதவியுடன், வனச்சரக அலுவலர்கள் செந்தில் குமார் (பென்னாகரம்), ராஜ்குமார் (ஒகேனக்கல்), வனவர்கள் புகழேந்திரன், சக்திவேல், ரகுராமன் உள்ளிட்டோர் அடங்கிய வனக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று வனப்பகுதி யில் சிகிச்சையளித்து வந்த ஒற்றை ஆண் யானை உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த யானையைப் பார்வை யிட்டு, அளிக்கப்பட்ட சிகிச்சைகள், யானையின் இறப்பு குறித்துக் கேட்டறிந்தார். இதன்பின் யானை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வனப்பகுதி யிலேயே புதைக்கப்பட்டது. மேலும், ஆண் யானை யின் இரண்டு தந்தங்களையும் மீட்டு, மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.