பழந்தமிழரின் வரலாற்று பொக் கிஷங்கள் புதைந்து கிடக்கும் கொடுமணலை வருங்கால சந்ததி யினர் தெரிந்து கொள்ளும் வகை யில், சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னி மலை அருகே நொய்யல் ஆற்றங் கரை பகுதியில் அமைந்துள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடை யாளங்கள் கிடைத்துள்ளது. அங்கு பெரிய அளவில் தொழில்து றைகளும், வணிகமும் நடந்ததற் கான ஆதாரங்களும் கிடைத் துள்ளன. இதனால் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் இதுகுறித்து பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தன. தமிழக தொல்லியல் துறையின் சார்பில் 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்ட 8 ஆவது அகழாய்வின் போது தான் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்தது. இந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் மற்றும் கொல் லுப்பட்டறைகள் இருந்த பகுதி, பழங்கால ஈமச்சின்னங்கள் எனப்ப டும் கல்லறைகள் இருந்த பகுதி, கிணற்று படிக்கட்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ஏரா ளமான முதுமக்கள் தாழிகள், கத் திகள், ஈட்டிகள், ஆணிகள் போன்ற இரும்பு பொருட்கள், நூற்றுக்க ணக்கான கல்மணிகள், வளை யல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், நாணயங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. இவ்வாறு கொடுமணலில் தோண்ட, தோண்ட பழங்கால வர லாற்று பொக்கிஷங்கள் கிடைத் தன. இவை அனைத்தும் தோண் டும் வரைதான் பேசப்படுகிறது. அதன்பிறகு யாருக்கும் இது பற்றி தெரிவதில்லை. எனவே வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் நிரந்த ரமாக அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழர் நாகரிக அடை யாளங்களில் அக்கறையுள்ளோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் வி.தாமோ தரன் கூறுகையில், 1981ஆம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதி யில் பல்வேறு தரப்பினரின் அக ழாய்வு பணிகள் நடைபெற்று வரு கிறது. அகழாய்வு பணிகள் நடை பெறும் போது மட்டும் இந்த பழங் கால சின்னங்கள் குறித்து மக்க ளுக்கு அறிவிக்கப்படுகிறது. பல ஊர்களில் இருந்து அகழாய்வு நடைபெற்ற இடங்களைக் காண கொடுமணலுக்கு வருகின்றனர். ஆனால் அகழாய்வு முடிந்து மூடப் பட்ட குழியை பார்த்து விட்டு ஏமாற் றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதன்பிறகு யாருக்கும் இது குறித்து தெரிவதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் என்னென்ன பொருட் களை பயன்படுத்தி எப்படி வாழ்ந் தார்கள் என்பதற்கான முழு ஆதா ரங்கள் கொடுமணலில் கிடைத்துள் ளன. எனவே, இந்த நாகரிகத்தை பற்றி வருங்கால தலைமுறை யினர் தெரிந்து கொள்ள அருங்காட் சியகம் அமைக்கவும், சுற்றுலாத்த லமாக அறிவிக்கவும் வேண்டும் என்றார்.
தொல்லியல் துறை
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்களிடம் கேட்ட போது, கொடுமணலில் கிடைத்த முக்கிய பழங்கால பொருட்களை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு சென்னை, எழும்பூரில் உள்ள தொல்லியல் துறை தலைமை அலு வலகத்துக்கு அனுப்பப்பட்டுள் ளது. மேலும் பழங்கால ஈமச்சின் னம் இருந்த பகுதியில் கிடைத்த ஒரு மனித மண்டை ஓட்டை எடுத்து அதனை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய மதுரையில் உள்ள காம ராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு நடத்தப்பட்ட சுமார் 12 ஹெக்டேர் பரப்பில் சுமார் 5 ஹெக்டேர் மட்டும் அரசு நிலங்கள், மற்றவை தனியார் நிலங்கள். அரசு நிலங்களை தொல்லியல் துறையின் பாதுகாக் கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கும் நடவடிக்கையை அரசு தொடங்கி யுள்ளது. அகழாய்விற்காக தோண்டப் பட்ட குழிகள் அனைத்தும் ஆய் வுக்கு பிறகு மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிலத்தின் உரிமை யாளர்கள் ஏதாவது கட்டடங்கள் எழுப்பி விட்டால் மீண்டும் குழி தோண்ட முடியாது. இதனால் தனி யார் நிலங்களையும் கையகப் படுத்தி பாதுகாக்கப்பட்ட பகுதி யாக அறிவிக்க வேண்டும், என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் சுற்றுலாத்தலமாக அறிவித்து, நிரந்தர அருங்காட்சி யகம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் அரசின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளது என்றும் தெரிவித்தனர்.