ஈரோடு, மே 11- பெருந்துறை அருகே பாண்டியம்பாளையம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் வேலை அளிக்க வேண்டும் எனக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆணையாரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பாண்டியம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட் சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்தனர். முன்னதாக மனு அளிக்கையில், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜு, மாவட்ட உதவித் தலைவர் மாரிமுத்து, தாலுகா தலைவர் தங்கமணி, தொழிற்சங்க தலைவர் குப்பு சாமி, திமுக பொறுப்பாளர் தங்கதுரை உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.