கோவை, பிப்.2- மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றி யக்குழு ஒத்தக்கால் மண் டபம் கட்சி கிளை செய லாளர் தோழர் ஆத்து பொள்ளாச்சி மணி (எ)சுப்பிர மணி (72) புதனன்று இரவு காலமானார். பிரிமியர்மில்ஸ் தொழி லாளியாகவும், சிஐடியு உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு தாலுகா குழு உறுப்பினராகவும், கிளை செயலாளராக செயல் பட்டுவந்தார். 1980ஆம் ஆண்டில் இன்ஜீனீரிங் சங்க கிளைகள் ஆர்.எம்.டீ, எவரெஸ்ட் பி.சி.சி. யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் போன்ற தொழிற்சாலைகளி்ல் நடைபெற்ற போராட்டங்களில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறை வையறிந்து சிபிஎம், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.