கோவை, டிச.2- மார்க்சிஸ்ட் கட்சியின் மதுக் கரை ஒன்றியக்குழு செயலா ளராக எம்.பஞ்சலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டம், மதுக் கரை ஒன்றியக்குழு 3 ஆவது மாநாடு நவகரை, மஹாலட்சுமி திருமண மண்டபத்தில் தோழர்கள் சீதா ராம் யெச்சூரி மற்றும் என். சங்கரய்யா ஆகி யோர் நினைவரங்கம், யு.கே.சிவஞானம் நினைவு கூடத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. இம்மாநாட்டில், மூத்த தோழர் கே.அய்யா சாமி செங்கொடி ஏற்றி னார். எம்.சுப்ரமணியம், சி.ரங்கநாதன், துளசி மணி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன் றியக்குழு உறுப்பினர் சி.ரங்கநாதன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.தெய்வேந்திரன் துவக்கவுரை யாற்றினார். அறிக்கை வேலையறிக்கையை ஒன்றியக் குழு செயலாளர் எம்.பஞ்சலிங்கம், வரவு செலவு அறிக்கையை ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.சுப்பரமணியம் ஆகியோர் முன்வைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என். ஆறுச்சாமி மாநாட்டை வாழ்த்தி பேசி னார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா சிறப்புரையாற்றினர். இதில், மதுக்கரை மரப்பா லம் ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்திட வேண்டும். எட்டிமடை பேரூ ராட்சி சாவடி பகுதியில் உள்ள வனத் துறையை ஒட்டியுள்ள விவசாய விலை நிலங் களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, மதுக்கரை ஒன் றியக்குழு செயலாளராக எம். பஞ்சலிங்கம் மற்றும் 13 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஒன்றியக் குழு உறுப்பினர் வி.மணி நன்றி கூறினார்.