districts

img

பசி பிணியை போக்குவது தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் பாடலாசிரியர் யுகபாரதி பேச்சு

திருப்பூர், செப். 21 - பசி பிணியை போக்குவது தான்  அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை என்று “மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ் வில் பாடலாசிரியர் யுகபாரதி கூறி னார். திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கல் லூரியில் வியாழக்கிழமை “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பண்பாட்டு பரப் புரை நிகழ்வு வியாழனன்று திருப்பூர்  சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராய ணன் தலைமையில் நடைபெற்றது.  வள்ளுவரும், வள்ளலாரும் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி பேசு கையில், திருக்குறள் மிகவும் ஆற்றல் மிக்கதாகவும், ஒவ்வொரு வரியும் மிகப் பெரிய கூற்றை எடுத்துரைக்கும். வள்ளு வர் அவருக்கு முன்னால் இருக்கும் இலக்கியத்தையும், வாழ்வையும், வர லாறையும் என அனைத்தையும் தொகுத்துக் கொடுத்தவர். திருக்குற ளில் இருக்கும் சொற்களை புரிந்து படித் தால் உலகின் அனைத்தையும் தொகுத்து விளக்கும் அடிப்படையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் எவ் வாறு வாழ வேண்டும் என்று மிகத் தெளி வாகவும், தமிழின் பெருமிதத்தையும், மரபையும் எடுத்துரைக்கிறது.  மனித நாகரிகம் பற்றி நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும், வாழ்வியல் நெறி களையும் வகுத்துக் காட்டிய நூல். உலக மொழிகள் பலவற்றிலும் மொழி  பெயர்க்கப்பட்டு உள்ளது.  அதே போல், அனைத்து மதங்களின்  நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங் கத்தையும், சமரச சன்மார்க்க நெறியை யும் வழங்கியவர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய  கருணை மனம் இருக்க வேண்டும்,

உனக்காக உண்ணாவிரதம் இருப்பதை  விட இன்னொருவருக்காக கொடுக்கும்  உணவு மிகவும் பெரியது. பசி பிணியை  போக்குவது தான் அனைத்து உயிர்க ளுக்கும் அடிப்படை என்று வள்ளலார் எடுத்துரைத்து உள்ளார். அவர் வழி களை நாமும் கடைபிடித்தல் வேண் டும். ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை காட்டிலும் சமூகத்தில் அதி கபடியான தரவுகள் உள்ளன. இதை  மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண் டும் என்று யுகபாரதி கூறினார். இந்நிகழ்ச்சியில் 850க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இவர்களுக்கு உயர்கல்வி மற்றும்  வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும்,  தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும்  வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டு  குறித்த கண்காட்சி, நான் முதல்வன் திட் டம் குறித்த கண்காட்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும்,  இதர கடன் உதவிகள் தொடர்பான கண் காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற் றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும்,  புத்தக அரங்குகள் மாவட்ட நூல கத்தின் சார்பிலும், சுயஉதவி குழுக்க ளில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகள் சார்பிலும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப் புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் செல்வி, சசூரி கலை அறிவியல் கல்லூரி  முதல்வர் ராம்குமார், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் துறை  சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.