திருப்பூர், டிச.11- திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 டன் ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங் கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் பறி முதல் செய்தனர். ஈரோடு சரக துணைக் காவல் கண்காணிப் பாளர் சுரேஷ்குமார் தலைமையில் வெள்ளக் கோவிலில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் ஓலப்பாளையம் சந்திப்பில் சனி யன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் 20 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநரான கும்ப கோணத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ்குமார் என்ப வரைக் கைது செய்து விசாரணை நடத் தினர். இதில், கும்பகோணத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு பொதுமக்களிடமிருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வெளி மாநிலத்துக்கு லாரி மூலமாக அனுப்பி வைத்ததாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 20 கிலோ ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்ததுடன், வினோத் மற்றும் லாரி உரிமையாளரை போலீசார் தேடி வரு கின்றனர்.