திருப்பூர் மன்னரை அருகே நொய்யல் ஆற்றில் இருந்து மூலிக்குளம் வரை தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ள வேர்கள் தன்னார்வ அமைப்புக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நற்பணிகள் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை, இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர் கள் யுவராஜ் சம்பத்குமார், மைக்கோ வேலுச்சாமி ஆகியோர் புதன்கிழமை வழங்கினர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே எம் சுப்பிரமணி யம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.