districts

img

தேவாலயத்தை பூட்டி அராஜகம்

ஈரோடு, மார்ச் 16- பவானி அருகே வட்டக்கல்சேரியில் தேவாலயத்தை  செயல்பட அனுமதிக்க முடியாது என சமூக விரோதி கள் அத்துமீறி தேவாலயத்தை பூட்டிய செயல் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், எலவமலை ஊராட்சிக்குட்பட்ட வட்டக்கல்சேரியில், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. 70  ஆண்டுகள் பழமையான இத்தேவாலயத்தில் பட்டிய லின மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று மாயவன், சித்தையன், சுதாகர், பெரிய சாமி, சத்தி, அசோக், குமரன், அமுல், மகேந்திரன் உள் ளிட்டோர் தேவாலயத்தை வெளியில் பூட்டினர். மேலும், அங்கு முருகன் படத்தை வைத்து பூஜை செய்தனர். இது குறித்து மதபோதகரான இமானுவேல் ராஜ் கேட்ட தற்கு, இங்கு தேவாலயம் இருக்கக் கூடாது அதை நாங்கள் இடித்து தரைமட்டமாக்கி விநாயகர் கோவில் கட்டுவோம் என பகிரங்கமாக மிரட்டினர். இங்கு கிறிஸ் துவ, இந்து மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பகுதி யில் மதக் கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென இமானுவேல் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.