திருப்பூர், நவ.2- சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத் தரவு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதி யத்தை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வியாழனன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி களில் வேலை செய்யும் மேல்நிலை தொட்டி இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர்கள் என அவுட்சோர்சிங் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக் கும் நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தீபாவளி பண்டிகை போனஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கம் எழுப்பினர். இதில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர். மேலும் நீதிமன்ற உத்தரவுப் படி சம்பளம் வழங்க வலியுறுத்தி சிஐடியு நிர் வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் உறுதியளித்தார்.