கோவை, மே 22-
ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வீட்டு பொருட்களை ஏற்றி சென்ற வாகனத்தை வழிமறித்து பணம் பறிப்பு நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ண னுண்ணி, தற்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய் யப்பட்டார்.
இதனையடுத்து ஆட்சியர் பங்களாவிலிருந்த பொருட்களை மினி லாரியில் ஏற்றி, அவரது சொந்த ஊரான கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளார். அப்போது பொருட்களை ஏற்றி வந்த வாகனம் கோவை - அவிநாசி சாலை வழியாக பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
மதுக்கரை நீலாம்பூர் நெடுஞ்சாலை, கஞ்சிகோணம்பாளையம் பகுதியில் நள்ளி ரவு சென்ற அந்த வாகனத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழிமறித்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுநரான சென் னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனிடம், லாரியின் டயர் பஞ்சராக இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஓட்டுநர், லாரியை ஓரமாக நிறுத்தி டயரில் காற்றின் அளவு குறைந்து விட்டதா? என பார்த்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்களும், அவரை சுற்றி வளைத்து கத்தி காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுதொடர்பாக முத்துகிருஷ்ணன் கோவை, போத்த னூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படை அமைத்துள்ள னர். மேலும், நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா, சுங்கச்சாவடி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.