ஈரோடு, ஜூலை 19- ஈரோடு மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7ஆவது நாளாக வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழு கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியடைந்த நிலையில், வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன்காரண மாக குடோனில் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. ஈரோடு பார்க் சாலை, மூலப் பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில், 450-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்படு கின்றன. இங்கிருந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், விளைப் பொருட் கள், மாட்டு தீவனம், பேப்பர், அட்டை, போர்டு உட்பட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப் படுகிறது. இதன் சுமை தூக்கும் பணியில், 7 ஆயிரத்திற்கும் அதிக மான தொழிலாளர்கள் ஈடுபடு கின்றனர். இந்நிலையில், ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் உடன் அனைத்து தொழிற்சங்கங் கள் ஒப்பந்தம் செய்து, 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு பெறும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை. இதை கண்டித்து கடந்த 13ஆம் தேதி முதல் சுமை தூக்கும் தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் தர்ணா போராட் டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் தர்ணா போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
7 ஆவது நாளாக சுமை தூக்கம் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டப் பொது தொழி லாளர் மத்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில், சிஐடியு மத்திய சங்கத்தின் தலைவர் தங்கவேல், ஈரோடு மாவட்ட சுமைதூக்கு வோர் மத்திய சங்கம் தலைவர் விஜயகுமார், மாவட்டச் செய லாளர் மாதையன், இணைச் செயலாளர் வீரமணி, பாட்டாளி தொழிற்சங்கத்தின் கவுரவ தலை வர் எஸ்.ஆர்.ராஜு உள்பட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் பொதுச் செய லாளர் கே.எஸ்.தென்னரசு, டிபிடிஎஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெரியார் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். முன்னதாக, மாவட்ட நிர் வாகம் கண்டு கொள்ளாத நிலை யில் செவ்வாயன்று பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் முத்துச் சாமி முன்னிலையில் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தினர், சுமை தூக்கும் தொழிலாளர் பிரதி நிதிகள் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. உடன்பாடு ஏற்பட வில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுமைதூக்கும் தொழிலாளர்களின் 7 ஆவது நாள் வேலை நிறுத்தம் தொடர்வதால், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பொருட்கள் செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது. ரூ. 600 கோடிக்கும் மேற்பட்ட மதிப் பிலான சரக்குகள் குடோன்களில் தேங்கி இருப்பதாக கூறப்படு கிறது.