திருப்பூர், மே 28 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மடத் துக்குளத்தில் இலக்கிய அமர்வு நடத்தப் பட்டது. மடத்துக்குளம் சூர்யா திருமண மண் டபத்தில் நடைபெற்ற இந்த இரண்டா வது இலக்கிய அமர்வுக்கு வெ.ராம துரை தலைமை ஏற்றார். ஆர்.பன்னீர் செல்வம் வரவேற்றார். பேராசிரியர் காமராஜ் அக்கினி பூக்கள் கவிதை நூல், உதிரும் வேர்கள் சிறுகதை தொகுப்பு ஆகிய நூல்களுக்கு மதிப் புரை ஆற்றினார். தமுஎகச கிளைச் செயலாளர் வி.ராஜரத்தினம் சங்கத்தின் கடமைகளும், செயல்பாடுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். எஸ். பழனிச்சாமி, மின்னல் கொடி, பரிமளம் ஆகியோர் முற்போக்கு பாடல்கள் பாடி னார்கள். கவிதை அரங்கேற்றத்தில் திண்டுக்கல் ரமீஜா, இளையபாரதி, ஆர்.ஆறுமுகம், செல்வராஜ் ஆகி யோர் கவிதை படைத்தனர். பூங் கொடி பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். அவர் எழுதிய கண்மணி களின் காலாட்டா புத்தகமும், செல்வ ஸ்ரீராம் எழுதிய கரிச்சான் குஞ்சுகளும், குயில் முட்டையும் என்ற புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டது. முடிவில் எம்.காந்தி நன்றி கூற நிகழ்வு நிறை வடைந்தது.