உடுமலை, மார்ச் 9- உடுமலை இலக்கிய கழகத்தின் 14 ஆவது இலக்கிய நிகழ்ச்சியை சனியன்று முனைவர் பட்ட ஆய்வு மாணவர் த. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி என்னும் நாவலை உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல் லூரிப் பேராசிரியர் முனைவர் ந.வேலுமணி மதிப்பாய்வு செய்து உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து, அரசு கலைக் கல்லூரி மாணவர் ந.கருப்புசாமி கந்தர்வனின் துண்டு என்ற சிறுகதையும், முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் மாணவர் இரா.பவித்ரா பத்தினியின் ஓலம் என்னும் சிறுகதையையும், எஸ்.நாஜிரா எழுத்தாளர் சல்மாவின் குழப்பத்தின் சுற்றுப்பா தையாய் என்னும் சிறுகதையை ஆய்வு செய்து அதில் உள்ள கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முன்னதாக, கவிஞர் தெய்வானை, பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயலாளர் பூபாலன், பட்டிமன்றப் பேச்சாளர் சுடர் ஒளி, அரசு கலைக் கல் லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மு.சதீஷ்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித் தனர். இந்த நிகழ்ச்சியை கவிஞர் இளையவன் சிவா ஒருங் கிணைத்தார். நிறைவாக ஆசிரியர் செல்லத்துரை நன்றி கூறி னார்.