districts

img

குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை

கோவை, மார்ச் 29– குடியிருப்பு பகுதிக்கு அருகாமை யில் புதிய மதுபானக்கடை அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை சிவா னந்தபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி, 11 ஆவது வார்டுக்குட்பட்ட சிவானந்தபுரம் பகுதி யில் மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடம் அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வா கம் முன்னெற்பாடுகளை செய்து வரு கிறது. இப்பகுதி நூற்றுக்கணக்கான குடி யிருப்புகள் உள்ள பகுதியாகும். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளா கும். இதனால் இங்கு மதுபானக்கடை அமைக்கக்கூடாது என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கோவை மாவட்ட  ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர். ஆனாலும், டாஸ்மாக் கடை அமைப்பதற்கு ஏற் பாடுகளும் நடந்து வருகிறது.  இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதனையறிந்த காவல் துறையினர் சமா தான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், மதுபானக்கடை அமைக்க மாட் டோம் என்கிற உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவ தில்லை என உறுதிபட தெரிவிக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து, கோவை சிவா னந்தபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைமையில் நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் திரண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இத னையடுத்து அதிகாரிகளின் கவனத் திற்கு கொண்டு சென்று இங்கு மதுபான கூடம் வராமல் இருக்க உரிய நடவ டிக்கை எடுக்கிறோம் என உறுதியளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.  முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முக சுந்தரம், கிளைச் செயலாளர் ஜெய காந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், உஷா உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.