districts

img

அழிவின் விளிம்பில் சுண்ணாம்பு உற்பத்தி தொழில்

தற்கால சூழலில் அறிவியல் தொழில்நுட் பத்தின் வளர்ச்சியால் பாரம்பரியமாக செய் யப்பட்டு வந்த பல்வேறு தொழில்கள் அழிந்து  வரும் நிலையில் அந்த வரிசையில் சுண் ணாம்பு உற்பத்தி செய்யும் சுண்ணாம்பு காள வாய்கள் அழிவின் விளிம்பிற்கே சென்று விட்டது. இதை நம்பி இருந்த ஏராளமான குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேறு  வேலைகளுக்கு சென்றுவிட்டனர். ஒருகாலத்தில் பொங்கல் பண்டிகை என் றாலே பொங்கல், கரும்பு வரிசையில் வெள் ளையடிப்பதற்கு சுண்ணாம்பும் நினைவுக்கு  வரும். சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற்கா கவே ஒவ்வொரு ஊரிலும் சுண்ணாம்பு காள வாய்கள் இருக்கும். ஆனால் தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் பரிணாம வளர்ச்சி யாக சுண்ணாம்பை கடந்து சுவருக்கு வண் ணம் பூச பட்டு, டிஸ்டம்பர், விதவிதமான வண் ணங்களில் பெயிண்ட் போன்ற பல்வேறு பொருட்களின் வரவால் சுண்ணாம்பு உற் பத்தி தொழில் அழிவின் விளிம்பிற்கே சென்று  விட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில காளவாய்கள் மட்டுமே சுண் ணாம்பை உற்பத்தி செய்யும் நிலை உருவா கிவிட்டது. சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற்கு முதல் படியாக ஓடையில் இருந்து தகுந்த கற்களை  தேடி எடுத்து வந்து அதை சிறு சிறு கற்களாக  உடைத்து 10 அடி உயரமுள்ள காளவாய்  எனப்படும் மண்ணால் கட்டப்பட்ட தொட்டி  போன்ற அமைப்பில் போடுவார்கள். பின்னர்  ஒருநாள் முழுவதும் தொட்டியின் அடியில்  விறகு மூலம் தீவைத்து நெருப்பு மூட்டி  ஆறவைத்தால் ஒடைக்கல் சுண்ணாம்பு  கல்லாக மாறிவிடும். தாராபுரம் வட்டாரத்தில் உப்புதுறைபா ளையம், சங்கர் மில்தெரு, பலிஜிவார் தெரு,  வரப்பாளையம், அலங்கியம் உள்ளிட்ட பகு திகளில் 30க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு உற் பத்தி செய்யும் காளவாய்கள் இருந்தன. சுண் ணாம்பிற்கு போதிய தேவையில்லாததால் காலப்போக்கில் சுண்ணாம்பு காளவாய்கள் காட்சி பொருளாகிவிட்ட நிலையில் தற் போது உப்புதுறைபாளையத்தில் மட்டும் ஒரே ஒரு சுண்ணாம்பு காளவாய் இயங்கி வருகிறது.

இதுகுறித்து 50 ஆண்டுகளாக இத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுப்பிரமணி என்பவர்  தெரிவிக்கையில், 15 வருடங்களுக்கு முன்பு  வரை நாள்தோறும் 10 பேர் வேலை செய்து  வந்தனர். உற்பத்தி செய்யப்படும் சுண் ணாம்பு கட்டுமானம் மற்றும் பல்வேறு தேவை களுக்கு உடனுக்குடன் விற்றுவிடும். ஆனால்  சிமெண்ட், டிஸ்டம்பர் வந்த பிறகு இரண் டுபேர் மட்டுமே வேலை செய்து வருகி றோம். அதுவும் கூட மாதத்தில் இரண்டு நாட் கள் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உள் ளது. மற்ற நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய் யும் சுண்ணாம்பும் உடனடியாக விற்கமுடி யவில்லை. சிறிய அளவில் கட்டுமான  வேலைகளான கான்கிரீட் தளங்களில் சுருக்கி  போடுவதற்கும், பட்டுப்புழு, கோழிப்பண் ணைகளுக்கு கிருமிநாசினியாகவும், விவசா யத்திற்கு உரமாகவும், சித்தமருத்துவர்கள் மருந்து பொருள் தயாரிக்கவும் வாங்கி செல் கின்றனர். அழியும் நிலைக்கு சென்று விட்ட  சுண்ணாம்பு தொழிலுக்கு மாற்றான தொழில் நடத்த அரசு உதவி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். -ஆர்.ராஜா