districts

img

மின்னல் தாக்கி 25 ஆடுகள் பலி

தருமபுரி, ஏப்.17-  பெரியூர் மலைக்கிராமத்தில் மின்னல் தாக்கி 25  ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயி களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள  பெரியூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த கெட்டையன் (எ) பெருமாள் என்பவரது மகன் சக்திவேல் (28). இவர், வனப்பகுதியை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும், வெள்ளாடு களையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெள்ளி யன்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த தால், அவரது ஆடுகளை மலைப்பகுதியின் பாறை  இடுக்குகளில் நிற்க வைத்து விட்டு வீட்டுக்கு சென் றுள்ளார். இதையடுத்து சக்திவேல், சனியன்று காலை ஆடுகள் நிற்கும் இடத்துக்கு சென்று பார்த்த போது, அங்கு 25 ஆடுகளும் மின்னல் தாக்கிய இறந்து கிடந் ததை கண்டு கண்ணீர் வடித்துள்ளார். ஒரு லட்சத்து  50 ஆயிரம் மதிப்பிலான 25 ஆடுகள் இடி தாக்கி இறந் தது, அவரது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமின்றி, அப் பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.