சேலம், டிச.13- புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த சங்பரிவார் கும்பலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் திருவள்ளுவர் பெரியாரைத் தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கரை காவி, திருநீறு, குங்குமம் இட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் கும்பலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாதி, மத மோதல்களை உருவாக்க வெறுப்பு பேச்சுக்களை பேசி சமூக பதட்டத்தை உருவாக்கும் சங் பரிவார் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் நாவரசன், உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி இதேபோன்று அம்பேத்கரை அவமதித்த சங்பரிவார் அமைப்பை கண்டித்து தருமபுரி மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.